பாராளுமன்ற ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தறுவாயில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனியாக அமர்ந்துள்ளார் என பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன 52 பேரை கொண்ட கூட்டு எதிரணி இந்த பிரச்சினைக்கு தலையிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அத்தியாவசிய சேவைகளாக பெற்றோலிய உற்பத்திகள், திரவு எரிவாயு, உட்பட அனைத்து எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியால் பிரசுரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி பத்திரிகையினை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
அரசாங்கத்திற்குள் பாரியளவில் மோதல்கள் நடக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் பாரியவிலான மோதல்கள் இடம்பெறுகின்றன. இதன் வெளிப்பாடாகவே தொழிற்சங்க போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தனது பாதாள கோஷ்டிகளை வைத்து ஆட்சி செய்ய பார்க்கின்றது.
அத்துடன் நேற்று ( நேற்று முன் தினம்) மிளகு விலையேற்றம் தொடர்பாக சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பிப்பதற்கு ஏற்கனவே கட்சி தலைவர் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டன. என்றாலும் நேற்றைய தினம் (நேற்று முன் தினம்) சபாநாயகர் கரு ஜெயசூரிய பலவந்தமாக சட்டங்களை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றி விட்டு எமக்கு ஒதுக்கப்பட்ட ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் இல்லாமல் செய்தனர்.
என்றாலும் நாட்டிலும் பாராளுமன்றத்திலும் ஜனநாயகம் குழித்தோண்டி புதைக்கப்பட்டு கொண்டிருக்கும் தருவாயில் எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் உள்ளார். எதுவும் பேசமால் மௌனியாக அமரந்துள்ளார். அப்படியாயின் எதற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வேண்டும்? 52 உறுப்பினர்களை கொண்ட கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களே தலையிட்டு தீர்க்க வேண்டியுள்ளது. ஆகவே இது தொடர்பில் ஆராய வேண்டும் என்றார்.
ராஜிதவுக்கு என்ன அதிகாரம்
ராஜபக்ஷவினரை கைது செய்யப்போவதாக அமைச்சரவை இணைப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். இவ்வாறு கூறுவதற்கு அவர் நீதி அமைச்சரா? அவர் தனது சட்டைக் பையினுள்ளா சட்டத்தினை வைத்திருக்கின்றார். நாட்டில் அமைதியை நிலையாட்டிய தலைவரை இவர்கள் நினைத்த படி கைது செய்ய முடியுமா? இதுவா நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பு என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM