யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், உயிரிழந்த மெய்ப்பாதுகாவலருக்கு அனுதாபம் தெரிவித்தும் அட்டன் நீதிமன்ற சட்டதரணிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்தனர்.
அட்டன் நீதிமன்ற வாளாகத்தில் குறித்த போராட்டம் இன்று காலை 10 மணி முதல் 10.30 மணிவரை நடைபெற்றது.
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் இடம்பெற்ற யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான தாக்குதலை கண்டித்தும், நீதிமன்ற நீதிவான்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் இப் போராட்டம் சட்டதரணிகளால் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதித்துறைக்கு எதிரான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என மும்மொழிகளிலும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனா்.
ஆர்ப்பாட்டம் நிறைவடைநந்த பின்னர் இன்றைய நாளில் நீதிமன்ற செயற்பாடுகளிலிருந்து விலகியிருப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் தெரிவித்தனர்.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் 25 சட்டத்தரணிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM