நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 5153 ஆக அதிகரித்துள்ளதுடன் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 301 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக பதிவாகியுள்ளது.
நாட்டில் டெங்கு நோய் பரவல் மிகவும் வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த ஆண்டின் ஏழு மாத காலத்தில் இதுவரையில் ஒரு இலட்சத்து 5,153 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 301 ஆக உயர்வடைந்துள்ளது. நாட்டில் சகல பகுதிகளிலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களில் நாடு முழுவதிலும் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1400 ஆக அதிகரித்துள்ளது. இந்த வாரத்திலும் அதிக நோயாளர்களின் எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக டெங்கு தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 44 வீதமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்தில் இனங்காணப்பட்டுள்ளனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மொத்தமாக 46 ஆயிரத்து 274 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடமாகாணத்தில் மொத்தமாக 4 ஆயிரத்து 890 நோயாளர்களும் கிழக்கு மாகாணத்தில் 9 ஆயிரத்து 100 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மிக மோசமாகப் பரவி வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதுடன் பாதுகாப்பு படைகளைக் கொண்டு குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தேசிய டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக அனைத்து ஊடகங்கள், பாடசாலை மாணவர்கள், சுகாதார அதிகாரிகள் அரச ஊழியர்கள், பொது மக்கள், முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் புகையிரத நிலையங்கள், வைத்தியசாலைகள் பஸ்தரிப்பிடம், பாடசாலை வளாகங்கள், வியாபார நிலையங்கள், விஹாரைகள் மற்றும் பொது நிலையங்கள் சுத்திகரிக்கப்பட்டன. அத்துடன் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இந்த டெங்கு ஒழிப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM