திருட்டில் ஈடுபட்ட நபர் தலவாக்கலையில் கைது

Published By: Priyatharshan

26 Jul, 2017 | 03:29 PM
image

பல திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தலவாக்கலை, வட்டகொட பகுதிகளிலுள்ள சில வீடுகளில் தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டுள்ளன. குறித்த திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைத் தேடும் வேட்டையில் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டு வந்தனர். 

அந்த வகையில்  திருட்டுடன் சம்பந்தப்பட்ட நபர்  திருட்டில் ஈடுபடும்போது கையும் மெய்யுமாக தலவாக்கலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொலிரூட் பகுதியில் வசித்துவரும் 23 வயதுடைய நபரே குறித்த களவுகளுடன் தொடர்புபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நிலையில் பலமுறை கைதுசெய்யப்பட்டு சிறையிலிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42