ஈழக்கனவினை நனவாக்க அரசாங்கம் முயற்சி

Published By: Raam

21 Jan, 2016 | 07:58 AM
image

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு உட்­பட புலம்­பெயர் அமைப்­பி­னரின் தேவைக்கு ஏற்ப அர­சாங்­க­மா­னது ஈழக்­க­ன­வினை நன­வாக்­கு­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது. இதற்கு நாம் ஒரு போதும் இட­ம­ளிக்­க­ப்போ­வது இல்லை. அதே­நேரம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­தமர் பத­வி­யினை துறப்­ப­தற்­கான காலம் நெருங்கி வரு­கின்­றது என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல்­வீ­ர­வன்ச தெரி­வித்தார்.

எதிர்க்­கட்­சி­யினை பல­வீ­னப்­ப­டுத்தும் முக­மாக சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே முரண்­பா­டு­களை தோற்­று­வித்து அர­சா­னது இன­வாத மோதல்­ஒன்­றுக்கு வழி­வ­குப்­ப­தா­கவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

எமது தாய்­பூ­மியை பாது­காக்க ஒன்­றி­ணைந்து செயற்­ப­டுவோம் எனும் தொனிப்­பொ­ருளில் பத்­த­ர­முல்­லையில் அமைந்­துள்ள அப்­பே­கம கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற சொற்­பொ­ழிவு நிகழ்வு ஒன்­றில்­நேற்று கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின்­த­லை­வரும் கொழும்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய விமல்­வி­ர­வன்ச மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இதன்­போது அவர்­தொ­டர்ந்து உரை­யாற்­று­கையில்.

ஈழக்­க­ன­வினை அடிப்­ப­டை­யாக கொண்டு கடந்­தக்­கா­லங்­க­ளில்­செ­யற்­பட்ட விடு­தலை புலி­களின் செயற்­பா­டு­களை எமது நாட்­டில்­முற்று முழு­வ­து­மாக நாம் இல்­லா­தொ­ழித்­துள்ள போதிலும் ஈழ கன­வினை அடி­ப­டை­யாக கொண்டு எமது நாட்­டுக்கு வெளியில் பல்­வேறு தரப்­பினர் செயற்­ப­டு­கின்­ற­மையை இன்று அவ­தா­னிக்க முடிந்­துள்­ளது.

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பு உட்­பட வடக்­கி­ழக்கில் தொழிற்­படும் ஏனைய கட்­சி­களின் தேவைக்கு ஏற்ப ஈழக்­க­ன­வினை இந்த அர­சாங்கம் நிறை­வேற்ற முயற்­சிக்­கின்­றது. மறு­புறம் எதிர்க்­கட்­சி­யினை பல­வீ­னப்­ப­டுத்தும் முக­மாக சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே முரண்­பா­டு­களை தோற்­று­வித்து இன­வாத மோதல் ஒன்­றுக்கு வழி­வ­குக்­கின்­றது இந்­நி­லை­மை­யா­னது மிகவும் ஆபத்­தா­னது.

அப்பப் புரட்­சிக்கு உரி­மை­கோரல்

கடந்த ஜன­வரி 8 ஆம்­தி­கதி நடை­பெற்று முடிந்த அப்பப் புரட்­சியின் அர­சாங்­கத்­திற்கு இன்று தேசிய ரீதி­யி­லும்­உ­ரிமை கோரப்­ப­டு­கின்­றது அதா­வது இந்­தியா, அமெ­ரிக்கா, பிரித்­தா­னியா உள்­ளிட்ட நாடு­களின் சூழ்ச்சி வலை­களின் அடி­ப­டை­யி­லேயே கடந்த இரண்டு தேர்­தல்­களும் நடை­பெற்று முடிந்­தன. அந்­த­வ­கை­யி­லேயே இன்று எமது நாட்டை துண்­டாட இந்த அர­சாங்கம் ஏனைய நாடு­க­ளு­டன்­து­ணை­போ­வ­தோடு அவற்­றுக்­கான செயற்­பா­டு­களை மும்­மு­ர­மாக மேற்­கொண்டு ஒப்­பந்­தங்­களை மறை­மு­காக செயற்­ப­டுத்­து­கின்­றது. இவற்றின் அடி­ப­டை­யி­லேயே முன்னாள் ஜனா­தி­பதி தோற்­க­டிக்­கப்­பட்டார்.

கறுப்பு ஜூலைக்­கான அடித்­தளம்

நல்­லாட்சி என வெறு­மனே வார்த்­தை­க­ளி­னால்­கூறி நாட்­டிற்­கும்­எ­மது மக்­க­ளுக்கும் மிகவும் எதிர்­ம­றை­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வரும் இந்த அர­சாங்கம் மீது நாளுக்கு நாள் மக்கள் அதி­ருப்­தி­ய­டைந்து வரு­கின்­றனர்.

அந்­த­வ­கையில் எதிர்க்­கட்­சி­யினை பல­வி­னப்­ப­டுத்த ஒவ­வொரு துரும்பு சீட்­டு­க­ளையும் பயன்­ப­டுத்தி தோல்வி கண்­டுள்ள நிலையில் முன்னர் ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசி­யக்­கட்சி அர­சாங்­க­மா­னது சிங்­கள,தமிழ் கல­வ­ரத்தை ஏற்­ப­டுத்தி இன­வாத மோதல் ஒன்­றுக்கு வழி­வ­குத்து எதிர்­கட்சி மீது அந்த குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி அந்த கட்­சியை தடை­செய்­தது. அவ்­வா­றான ஒரு செயற்­பா­டையே இன்றும் முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றது. அதா­வது சிங்­கள, முஸ்லிம் மக்­க­ளி­டையே மோதலை உரு­வாக்கி அந்த குற்­றத்தை ஒன்­றி­ணைந்த எதிர்­கட்­சி­யான எம்­மீது சுமத்த முற்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­மை­யா­னது மிகவும் பயங்­க­ர­மா­னது இவற்றை அனை­வரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தைப்­பொங்கல் விழா 

இம்­முறை தைப்­பொங்கல் விழா­வினை பிர­த­மர்­யாழ்­பா­ணத்தில் மிகவும் சிறப்­பாக கொண்­டா­டினார் இதன்­போது பிர­த­மரி ன்உரையில் சிங்­க­ள­வர்­களின் பாற்­சோறை விட­வும்­த­மி­ழர்­க­ளின்­தைப்­பொங்கல் மிகவும் இனிப்­பா­னது என்று தெரி­வித்­தி­ருந்தார்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் மனைவி பிர­த­ம­ருக்கு முறை­யான பாற்­சோறை தயா­ரித்து தந்­தது கிடை­யாது என்றே நான் கரு­து­கின்றேன். இவ்­வா­றான கருத்­து­க­ளின்­அ­டி­ப­டை­யி­லேயே பிர­த­மரும் இன்று செயற்­பா­டு­கின்றார். அதா­வது எமது பெரு­பான்மை சழூ­கத்தை மறந்து அனைத்து சிறு­பான்­மை­யி­னத்­தி­னரின் நல­னி­லேயே பிர­த­மரின் செயற்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன. குறிப்­பிட்டு கூறு­வ­தாயின் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு மாத்­தி­ரமே ரணில்­விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரா­கவும் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கவும் செயற்­ப­டு­கின்­றனர்.என்றே குறிப்பிட வேண்டும்.

நாட்டை பிளவுப்படுத்த முயற்சி 

அப்பப் புரட்சியினால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அரசாங்கமானது தொடர்ச்சியாக சர்வதேசத்தின்தேவைக்கு ஏற்ப எமது நாட்டை பிளவுப்படுத்தும் நடவடிக்கைகளை மும்முரமாக முன்னெடுக்கின்றது. அந்தவகையில்இதற்கு சர்வதேச நாடுகளும் முழுமையான உதவிகளை வழங்குகின்றன. எனவே எமது தாய்பூமியை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் அதற்கு இந்த அரசாங்கத்தை வீழ்த்தவும் பிரதமரின் பதவியை துறக்க வைக்கப்பதற்கும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு வருமாறு நான் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19