அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள் ளது. எனவே, எதிர்வரும் சனிக்கிழமை குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச் சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச் சில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரத்தை இன்றைய (நேற்று) அமைச்சரவையில் சமர்ப்பித்தேன்.
அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எனவே குறித்த அனுமதி இன்றிலிருந்து அமுலுக்கு வரவுள்ளது. ஏனெனில் சமர்ப்பித்த அமைச்சரைவப் பத்திரத்திலேயே உடனடியாக அமுல்படுத்தும் வகையில் அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்கிணங் அனுமதி கிடைத்துள்ளது.
அமைச்சரவையில் நான் முன்வைத்த தெளிவூட்டலுக்குப் புறம்பாக அமைச்சர்களும் தமது அபிப்பிராயங்களைத் தெரிவித்தனர். எனவே குறித்த பேச்சுவார்ததை ஒரு மணி நேரம் வரையில் நீடித்தது. குறிப்பாக ஜனாதிபதி மற்றும் பிதமரும் தமது அபிப்பிராயங்களையும் முன்வைத்தனர். அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த உடன்படிக்கையை நாளை (இன்று) பாராளுமன்றில் சமர்ப்பித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை பாராளுமன்றில் விவாதம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
அதற்கிணங்க நான் நாளைக்காலை (இன்று) பாராளுமன்றில் இவ்வுடன்படிக்கைகையை சமர்ப்பிக்கவுள்ளேன். ஆகவே குறித்த உடன்படிக்கைகயை மேலும் வலுப்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை முன்வைத்ததால் அதற்கு இடமளிப்பதற்கு தயார் என்கின்ற விடயத்தை தெரியப்படுத்துமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
எனவே பாராளுமன்றில் சமர்ப்பித்த பின்னர் சகலரும் குறித்த உடன்படிக்கையினை அரசியலுக்கு அப்பால் நின்று நாட்டின் அபிவிருத்தி தொடர்பில் அவதானிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் குறித்த உடன்படிக்கையானது தற்போதைய சூழலில் நாட்டுக்கு அவசியமான ஒன்றாகவும் உள்ளது.
இவ்வுடன்படிக்கை மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யப்போவதில்லை. அவ்வாறான பொய்ப்பிரசாரத்தையே சில தரப்பு மேற்கொண்டு வருகிறது. அத்துடன் குறித்த ஒப்பந்தத்தில் 80/ 20 சதவீதப் பங்கு என ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் தற்போது அது 70/30 சதவீதப் பங்காக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கையில் நூறு சதவீத பாதுகாப்பு வகிபாகம் இலங்கைக்கே பொறுப்பாக்கப்பட்டுள்ளது. அவ்விடயம் உடன்படிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சீனா உட்பட வேறு நாடுகளின் படைப்பிரிவுகள் வருகை தருவாதாயினும் அதற்கு இலங்கையிடமே அனுமதி பெறவேண்டும். அத்துடன் அங்குள்ள நுளைவாயில் காவலாளி முதல் சகல பாதுகாப்பு நடவடிக்கைகளையும் இலங்கையே மேற்கொள்ளவுள்ளது.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்ற பின்னர் அம்பாந்தோட்டை துறைமுகத்தை எவ்வாறு கொண்டு நடத்துவது தொடர்பில் யோசிக்க வேண்டிய கட்டாயத்திற்கு துறைமுக அதிகார சபை வந்தது. ஏனெனில் குறித்த துறைமுகத்தை நிர்மாணிப்பதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டுள்ளது. அதற்காக பெறப்பட்ட கடனை செலுத்த வேண்டிய பொறுப்பு துறைமுக அதிகார சபைக்கு பொறுப்பாக்கப்பட்டது.துறைமுக அதிகார சபைக்கு கிடைக்கும் இலாபத்தின் மூலம்தான் அக்கடன் தொகை செலுத்தப்பட்டு வந்தது.
எனவே 2011 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் துறைமுக அதிகாரசபை குறித்த கடனுக்காக 46 ஆயிரம் மில்லியன் ரூபா நிதியை துறைமுகத்தை நடத்துவதற்கும் செலவழித்துள்ளது. துறைமுக அதிககார சபை தனக்கு கிடைக்கும் இலாபத்தின் 9.1 பில்லியன் ரூபா நிதியினை வருடாந்தம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்காக செலவழிக்கிறது. ஆகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தினுடாக துறைமுக அதிகார சபை எந்தளவு சுமையினை பொறுப்பேற்றுள்ளதுஎன்பதனை புரிந்துகொள்ள முடிகிறது.
எனவே தொடர்ந்தும் குறித்த கடனை நிர்வகிக்க முடியாத நிலை துறைமுக அதிகார சபைக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளது. ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் துறைமுக அதிகார சபை நிதி செலவழிக்க வேண்டிய தேவை இல்லை.
மேலும் குறித்த உடன்படிக்கை மூலம் துறைமுக அதிகாரசபைக்கு 1.12 பில்லியன் டொலர் நிதி கிடைக்கவுள்ளது. அந்நிதி திறைசேரிக்குச் செல்லவுள்ளது. எனவே செலுத்த வேண்டிய கடனை திறைசேரி பொறுப்பேற்கவுள்ளது. ஆகவே துறைமுக அதிகார சபை செலுத்த வேண்டிய 9.1 பில்லியன் ரூபா நிதியை சேமிக்க முடியும். அந்நிதியைக் கொண்டு துறைமுகங்களை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM