இலங்கையின் மின்சாரத்துறை ஒழுங்குறுத்துநரான இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியினைக் கோரி இலங்கை மின்சார சபையானது குறை செலவு நீண்ட கால மின் பிறப்பாக்க விரிவாக்கத்திட்டத்தினை சமர்ப்பித்து இருந்தது. இலங்கைக்கான தொடர்ச்சியான மின் வழங்கல் மற்றும் சக்திப் பாதுகாப்பு ஆகிய நோக்குகளுடன், இத்திட்டத்தின் வழியாக காண்பிக்கப்பட்ட பல்வேறு தெரிவுகளில் சிறந்ததொரு தெரிவுத் திட்டத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது அனுமதி அளித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் நடத்தப்பட்டதும் மின்சார விரிவாக்கத் திட்டமிடற் கற்கைகள் பற்றியதுமான அண்மைய ஆய்வு முடிவுகளின் அடிப்படையிலேயே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு மின் பிறப்பாக்கத் தெரிவு திட்டங்களை உள்ளடக்கி அளிக்கப்பட்ட, இத்திட்டம் 2018–-2037 காலப்பகுதிக்கானது.இலங்கை மின்சார சபையானது, குறை செலவு கொள்கைகளுக்கு அமைய, அடுத்த 20 ஆண்டுகாலத்திற்கு நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமாக “பேஸ் கேஸ் திட்டம்” இனைப் பரிந்துரைத்தது.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவானது LCLTGEP 2018–-37 தொடர்பில் ஒரு பொதுமக்கள் ஆலோசனையளிப்பினை நடத்தி பங்காளர்களின் கருத்துகளைப் பெற்றுக் கொண்டது. அத்துடன் மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட தெரிவுத்திட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் ஆழமான கற்கையும் ஆணைக்குழுவால் நடத்தப்பட்டது.
இந்தக் கற்கைகளின் ஊடாக, தரவேற்றப்பட்ட எரிபொருள் விலைகளின் திருத்தங்கள், வெளிக்காரணிகளின் (சமூக மற்றும் சுற்றுச்சூழல் செலவுகள்) செலவுகள் ஆகியவற்றையும் ஆணைக்குழு ஏற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. நாட்டில் மின்சாரத் தடங்கல்கள் ஏற்படாமல் மிகப் பொருத்தமானதும் நிலைபேறானதுமான தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட குறை செலவு மின்னிலையச் சேர்க்கையினை அடையாளம் காண்பதே இதன் நோக்கம் ஆகும்.
அடுத்த 20 ஆண்டு காலப்பகுதியில், 242MW பிரதான நீர்ச்சக்தி, 215MW குறும் நீர்ச்சக்தி, 1389MW சூரிய சக்தி, 1205MW காற்றுச்சக்தி, 85MW உயிர்த்திடப்பொருள் சக்தி, 4800MW இயற்கை வாயு, 330 MW எண்ணெய் அடிப்படையிலான சக்தி, 105MW காஸ் டேர்பைன் சக்தி ஆகியன அடுத்த 20 ஆண்டுகாலத்திற்கான மின் பிறப்பாக்க முறைமையில் சேர்க்கப்படுவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.
இதே திட்டமே இலங்கை மின்சார சபையினால் ஒரு தெரிவுத்திட்டமாக LCLTGEP 2018-–37 இல் முன்மொழியப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், 15,607.70 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீட்டுச் செலவாகக் கொள்வதால், இது அடிப்படைத்திட்டமாக மின்சார சபையால் முன்மொழியப்படவில்லை.ஆனாலும், தரவேற்றப்பட்ட எரிபொருள் விலைகள் மற்றும் வெளிக்காரணிச் செலவுகள் ஆகியவற்றை திருத்திய பின்னர், குறை செலவு கொள்கைகளின் அடிப்படையில் 13,336 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுச் செலவுடையதாகிய இத்திட்டத் தெரிவு ஆணைக்குழுவால் ஏற்கப்பட்டது.
2018–2037 காலப் பகுதியில் இலங்கையானது 5.0% சக்தி தேவைப்பாட்டு வளர்ச்சி வீதத்தையும் 4.5% உச்சத் தேவைப்பாட்டு வளர்ச்சி வீதத்தையும் எதிர்பார்க்கின்றது.
அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை விரைந்து நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கோரியுள்ளது. இதன் மூலமாகவே எதிர்காலத்தில் மின்சாரத் தடைகள் மற்றும் வெளியாரி டமிருந்தான அவசர மின் கொள்வனவு ஆகியவற்றை தவிர்க்க முடியும் எனவும் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM