இந்திய – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையே பெங்களூரில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் மழை யால் கைவிடப்பட்டது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
மொஹாலியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், பெங்களூரில் இரண்டாவது போட்டி தொடங்கியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவுசெய்தது.
இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் தென்னாபிரிக்க அணி 214 ஓட்டங்களுக்குள் சுருண்டது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதையடுத்து நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கவிருந்த நிலையில் பெங்களூரில் பெய்து வரும் கன மழையால், ஆடுகளம் முழுவதும் மூடப்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் மைதானத்தை, சூப்பர்சானிக் மூலம் காயவைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் பிற்பகலிலும் மழை தொடர்ந்ததால், ஆட்டத்தை கைவிடுவது என நடுவர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM