2017 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் இதுவரையான காலப்பகுதி வரை ஒரு இலட்சத்து 2,809 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு இந்நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 268 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ள நோயாளர்களின் தொகையானது கடந்த வருடம் முழுவதிலும் இனங்காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் தொகையை காட்டிலும் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 2,809 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இந்நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்ட 268 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 22,186 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 17,228 பேரும், களுத்துறையில் 5616 பேரும் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன் திருகோணமலையில் 4415 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4135 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3255 பேரும், குருணாகலில் 5943 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 6081 பேரும் மாவட்டளவில் பதிவாகியுள்ளனர்.
அத்துடன் கண்டி மாவட்டத்தில் 6017 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் கேகாலை மாவட்டத்தில் 4949 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 2855 பேரும் பதுளையில் 1701 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் 55,150 டெங்கு நோயாளர்களே இனங்காணப்பட்டிருந்தனர். எனினும் இவ்வருடத்தை பொறுத்தமட்டில் இதுவரையான காலப்பகுதியிலேயே அத்தொகை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
குறித்த டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைவாக விசேட தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் டெங்கு ஒழிப்பு விசேட குழுவினரின் ஊடாக இச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதன்மூலம் நாட்டின் அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொது இடங்கள் என்பனவற்றில் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடசாலைகள், வணக்கஸ்தலங்கள் மற்றும் பொதுப்போக்கு வரத்து தரிப்பிடங்கள் தொடர்பிலும் கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் இயங்கும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு மணித்தியாலம் தமது சூழலை சுத்தப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய் தொடர்பில் மக்கள் தொடர்ந்தும் விழிப்புணர்வுடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதற்கமைய மூன்று நாட்களுக்கு மேல் கடுமையான காய்ச்சல் மற்றும் டெங்கு தொற்று ஏற்படுவதற்கான ஆரம்ப கட்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக பொலிஸார், சுகாதார சேவையாளர்கள் மற்றும் இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சு விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவருவதுடன் அவ்வாறு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதேவேளை அதிகரித்து வரும் டெங்கு நோயினை கட்டுப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM