அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மருத்துவ பீட ஒருங்கிணைப்பாளரான ரயன் ஜயலத்தை கைது செய்ய பிடியாணை அவசியமில்லை எனவும் அவர் பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் தேடப்படும் சந்தேக நபர் என்றும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்ச கர் ருவான் குணசேகர தெரிவித்தார். நேற்று பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கடந்த 20ஆம் திகதி ரயன் ஜயலத்தை கைது செய்ய சிவில் உடையில் வெள்ளை வேனில் பொலிஸார் சென்றதால் ஏற்பட்ட பரபரப்பு தொடர்பில் விளக்கமளிக்கும் போதே பொலிஸ் அத்தியட்சகர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி சுகாதார அமைச்சுக்குள் அத்து மீறியமை தொடர்பில் ரயன் ஜயலத் பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபராவார். பொதுச் சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக மாளிகா கந்த நீதிவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் மருதானை பொலிஸாரும் சி.சி.டி. எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் விசாரணைகளை செய்து வருகின்றன. இந் நிலையில் ரயன் ஜயலத்தை கைது செய்ய ஏற்கனவே குற்றத் தடுப்புப் பிரிவினர் அவரது வீடு அமைந்துள்ள வந்துரம்ப பகுதிக்கு சென்றிருந்தனர். தொலைபேசியில் அழைத்து அவர் சந்தேக நபர் என்பதையும் கூறியிருந்தனர்.
பிடியாணை இல்லாது கைது செய்ய முடியுமான குற்றச்சாட்டே ரயன் ஜயலத் மீது உள்ளது. இதனைவிட 3049/16 என்னும் வழக்கில் கோட்டை நீதிமன்றினால் அவ ருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கோட்டை நீதிமன்றில் மேலும் நான்கு வழக்குகளும் அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன. ரயன் ஜயலத்தை கைது செய்ய பொலிஸார் டபிள்யூ.பி. என்.ஏ.4010 எனும் வேனில் சென்றிருந்தனர். இது பொலிஸ் திணைக்களத்துக்கு சொந்தமான வாகனமாகும். கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவே அதனை பயன்படுத்துகின்றது. கைது செய்ய சென்ற போது குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி, வேனின் சாரதி உள்ளிட்டோர் சீருடையிலேயே இருந்துள்ளனர். சிலரே சிவில் உடையில் சென்றுள்ளனர்.
சிவில் உடையில் சென்று பொலிஸாரால் கைது நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். எனினும் கைது செய்ய சென்ற போது பொலிஸார் உரியவாறு செயற்பட்டனரா என்று ஆராய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர விசேட நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். இது தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்க மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நத்தன முனசிங்கவுக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். அவரது அறிக்கை ஒரு வாரத்தில் கிடை க்கும். அதில் பரிந்துரைக்கப்படும் விட யங்களுக்கு அமைய, பொலிஸார் கட மையை நிறைவேற்றும் போது தவறிழை த்திருப்பின் நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM