சட்டவிரோதமான முறையில் தன்வசம் பன்றி, மரை இறைச்சிகளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க உத்தரவிட்டார்.
அக்போபுர பகுதியைச் சேர்ந்த முதியான்சலாகே ரஞ்சித் பண்டார (51) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவராவர்.
அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்கஸ்வெவ காட்டுப்பகுதியில் வேட்டையாடிய பன்றி, மரை என்பவற்றின் இறைச்சியை விற்பனைக்காக மறைத்து வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் வரை கைது செய்ததுடன் இறைச்சியையும் கைப்பற்றியுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபரை கடந்த திங்கட்கிழமை மாலையில் கைது செய்து விசாரணைகளின் பின்னர் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
(கந்தளாய் மேலதிக நிருபர்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM