காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் புதிய அரசியலமைப்பை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிகவும் முக்கியமானவை. அவை காலத்தின் தேவையாகவும் காணப்படுகின்றன. வெறும் ஏடுகளுக்குள் மட்டுப்பட்டு விடக்கூடாது இலக்கை அடைவதற்கு இலங்கை சவால்களுக்கு மத்தியில் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என ஐக்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை'கேசரி'க்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது; முன்னாள் ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் இலங்கைக்கு விஜ யம் செய்திருந்தேன். அப்போது நாட் டில் தேர்தல் சூழல் காணப்பட்டது. எனவே, முழுமையாக எதனையும் அவதானிக்கக்கூடிய சூழல் அன்று இருக்கவில்லை. எனினும் மக்களையும் பல்வேறு சிவில் தரப்புப்களையும் சந்தித்திருந்தேன் . அதன்போது உணர்வுபூர்வமான ஏமாற்றங்களை சந்திக்க நேரிட்டது.
தேர்தல் முடிந்த பின்னர் ஜனாதிபதி எதிர்கால திட்டங்களை வெளியிட்டிருந்தார். பல விடயங்களில் எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. அதேநேரம் இலங்கையின் பிரதிநிதிகளை சந்தித்தபோது அவர்கள் மத்தியில் உணர்வுபூர்வமான ஏமாற்றங்களை காணக்கூடியதாகவும் கேட்கக்கூடியதாகவும் இருந்தது. சில கவலைக்கிடமான விடயங்களும் இடம்பெற்றிருந்தன.
நிலையான நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புகள் காணப்படுகின்றன. அதனை யாரும் மறுக்க முடியாது. இலங்கையின் உறுதிப்பாடு நல்லிணக்கத்தை அடைய வேண்டும் என்பதில் அமைந்துள்ளது. எனவே அரசாங்கத்தின் தலைவர்கள் தொடர்ந்தும் சிறந்த வகையில் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும்.
நிலையான அமைதி , நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பொறிமுறைகளில் ஐக்கிய நாடுகளை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதை விடுத்து பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட இலங்கை அனைத்து வகையிலும் முழுமையடைய வேண்டும். இலக்கை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக அலுவலகம் மற்றும் புதிய அரசியலமைப்பை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிகவும் முக்கியமானதாகும். அவை காலத்தின் தேவையாகவும் காணப்படுகின்றன. அவை வெறும் ஏடுகளுக்கு மட்டுப்பட்டு விட கூடாது. எதிர்வரும் காலங்களில் இடம்பெற உள்ள ஐக்கிய நாடுகளின் அமர்வுகளில் இலங்கை தனது முன்னேற்ற அறிக்கைகளை சமர்பிக்க வேண்டியுள்ளது.
புதிய அரசியலமைப்பு விவகாரம் முக்கியமானதொன்றாகும். அனைத்து சமூகங்களும் உள்வாங்கப்பட்ட அரச நிர்வாக முறைமைக்கு அதுவே அடித்தளமாக அமையும் எனவும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் மற்றும் புதிய அரசியலமைப்பை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிகவும் முக்கியமானவை. அவை காலத்தின் தேவையாகவும் காணப்படுகின்றன. வெறும் ஏடுகளுக்குள் மட்டுப்பட்டு விடக்கூடாது
இலக்கை அடைவதற்கு இலங்கை சவால்களுக்கு மத்தியில் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்தார்.
வீரகேசரி நாளிதழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
விபரம் வருமாறு;
கேள்வி: முன்னைய விஜயத்தையும் தற்போதைய நிலைமையையும் எவ்வாறு உணர்கிறீர்கள்?
பதில்: இலங்கைக்கான இந்த விஜயத்தில் பல்வேறு விடயங்களை கருத்தில் கொள்ளக் கூடியதாக உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ முனுடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தேன். அப்போது நாட்டில் தேர்தல் சூழல் காணப்பட்டது. எனவே முழுமையாக எதனையும் அவதானிக்க முடியவில்லை. எனினும் மக்களையும் பல்வேறு சிவில் தரப்புகளையும் சந்தித்திருந்தேன்.
உணர்வுபூர்வமான ஏமாற்றங்களை சந்திக்க நேரிட்டது. தேர்தல் முடிந்த பின்னர் ஜனாதிபதி எதிர்கால திட்டங்களை வெளியிட்டார். பல விடயங்களில் எதிர்பார்ப்புகள் அதிகமாக காணப்பட்டன. இலங்கை பிரதிநிதிகளை சந்தித்தபோது அவர்கள் மத்தியில் உணர்வுபூர்வமான ஏமாற்றங்களை கேட்க கூடியதாக இருந்தது. சில கவலைக்கிடமான விடயங்களும் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் வடக்கு மற்றும் கிழக்கிற்கு எதிரான விடயங்களை குறிப்பிடலாம். இலங்கை ஐக்கிய நாடுகள் சபையுடன் கடந்த 60 வருடங்களாக இணைந்துள்ளது. ஆனால் 2015 ஆம் ஆண்டிற்கு முன்னரான குறிப்பிட்ட காலப்பகுதியில் அந்த இணைப்பு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்திருந்தது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து தற்போதைய அரசாங்கம் நிலையான சமாதானத்தை நோக்கிய நகர்வுகளில் ஈடுபட்டுள்ளது. உலகத்தோடு இலங்கை மிகப்பெரிய ஈடுபாடு கொண்ட ஒரு சூழ்நிலையை தற்போது காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான நிலைமையில் இலங்கைக்கு வந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. அனைத்து சமூங்களுக்கும் எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன. சவால் மிக்கதாக இருந்தாலும் அரசாங்கம் முன்னோக்கி செல்ல வேண்டிய கட்டாய தேவை காணப்படுகின்றது.
கேள்வி: இலங்கை விஜயத்தில் அமைந்திருந்த சந்திப்புகள் குறித்து?
பதில்: ஜனாதிபதி உள்ளிட்ட அரச தலைவர்களுடனான சந்திப்புகள் சிறப்பாக அமைந்தன. தற்போதைய சூழலில் இலங்கை மீள் கட்டுமானத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. நீண்ட கால மோதல்களின் பின்னர் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை உருவாக்குவது என்பது எளிதான விடயமல்ல . ஆனால் அதனை சாதிக்காது சிறந்த எதிர்காலத்தை நோக்கி நகர்வது சாத்தியமற்றது. எவ்வாறாயினும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையின் முன்னோக்கிய நகர்வுகளுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்கும். எனது இந்த விஜயத்தின் நோக்கமும் கடினமென்றாலும் இலங்கை முன்னோக்கி பயணிப்பதற்கு தேவையான உந்துசக்தியை பெற்றுக்கொடுப்பதாகவே அமைகின்றது.
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை விஜயத்தின் இறுதியில் தெரிவித்த விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். எவ்வாறாயினும் எனது விஜயம் அதனுடன் சார்ந்ததல்ல. உள்ளடக்கங்கள் குறித்து அவர் எதிர்காலத்தில் தெளிவுபடுத்துவார். ஆனால் அவரது பரிந்துரைகள் தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளும் என்று நினைக்கின்றோம்.
சந்திப்புகளின் போது பல்வேறு நிலைகளில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அவை ஆக்கபூர்வமானவை. இலங்கைக்கு உகந்ததன்மை, செழிப்பு, சமுதாயத்துடன் இணக்கமான உறவு ஆகியவற்றை இலங்கை பெற்றுக்கொள்வதற்கு தேவையான விடயங்கள் சந்திப்புகளில் பிரதிபலிக்கப்பட்டன. இந்த புரிதல் அவசியமானதாகும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் கடுமையான நிலைப்பாட்டை தெரிவித்தது. ஆட்சி முறைமை தொடர்பிலேயே அவர்களது கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசியல் தீர்வு விடயம் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் குறிப்பிட்டனர். அவர்களின் நிலைப்பாடுகளை கருத்தில் கொண்டுள்ளோம்.
கேள்வி: உத்தேச அரசியலமைப்பு மற்றும் நல்லிணக்கம் பற்றி நீங்கள் புரிந்துகொண்டது என்ன?
பதில்: நிலையான நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புகள் காணப்படுகின்றன. அதனை யாரும் மறுக்க முடியாது. இலங்கையின் உறுதிப்பாடு நல்லிணக்கத்தை அடைய வேண்டும் என்பதில் அமைந்துள்ளது. எனவே அரசாங்கத்தின் தலைவர்கள் தொடர்ந்தும் சிறந்த வகையில் நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் பயணிப்பார்கள் என நம்புகின்றோம்.
நிலையான அமைதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட பொறிமுறைகளில் ஐக்கிய நாடுகளை திருப்திப்படுத்துவதற்காக இலங்கை செயற்பட வேண்டியதில்லை. ஆனால் பொருளாதாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து வகையிலும் இலங்கை முழுமையடைய வேண்டும் என்றால் அர்த்தபுஷ்டியான முன்னெடுப்புக்கள் அவசியமாகும். அதனை நோக்கி பயணிக்க வேண்டும்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக அலுவலகம் மற்றும் புதிய அரசியலமைப்பை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிகவும் முக்கியமானதாகும். அவை காலத்தின் தேவையாகவும் காணப்படுகின்றன. அவை வெறும் ஏடுகளுக்கு மட்டுப்பட்டு விடக் கூடாது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் அமர்வுகளில் இலங்கை தனது முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டியதுள்ளது.
புதிய அரசியலமைப்பு விவகாரம் முக்கியமானதொன்றாகும். அனைத்து சமூகங்களும் உள்வாங்கப்பட்ட அரச நிர்வாக முறைக்கு அதுவே அடித்தளமாக அமையும்.
கேள்வி: இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறல் பற்றி உங்களது எண்ணப்பாடு யாது?
பதில்: நீண்ட கால மோதல்களின் பின்னர் பொறுப்புக்கூறல் விடயத்தில் பல நாடுகள் சவால்களை எதிர்கொள்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் மோதல்கள் இடம்பெற்ற பல நாடுகளுக்கு சென்றிருந்த போது இதனைக் காணக் கூடியதாக இருந்தது. ஆனால் பொறுப்புக்கூறல் என்ற விடயம் காயங்களுக்கு மருந்து போடுவதாக அமைகின்றது.
எனவே மோதல்கள் இடம்பெற்ற நாடுகளில் பொறுப்புக்கூறல் கேள்விகளுக்கு பதிலளிப்பதன் முக்கியத்துவம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அதனூடாகவே நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள் சாத்தியப்படும். எனவே பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையை ஊக்கப்படுத்தவே விரும்புகின்றேன்.
இலங்கைக்கு எது சிறந்தது என்று யாரும் தீர்மானித்து விட இயலாது. ஆனால் உலகில் ஏனைய பல நாடுகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் அனுபவங்களை பெற்றுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபை கூட்ட தொடர் எதிர்வரும் செப்டெம்பரிலும் அடுத்த வருடம் மார்ச் மாத மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரும் இடம்பெற உள்ளன. இவற்றில் அரசாங்கம் முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும். எவ்வாறாயினும் அழுத்தம் கொடுக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட எந்தவொரு விடயமும் ஐக்கிய நாடுகள் சபையின் நலன்களை சார்ந்ததல்ல. மாறாக இலங்கையின் நிலையான அமைதிக்கும் மக்களின் சுபிட்சத்திற்குமானதாகவே உள்ளது.
கேள்வி: இலங்கை நிலைப்பாடுகளில் ஐ.நா.வின் நம்பகத்தன்மை எவ்வாறுள்ளது?
பதில்: ஐ.நா. தெளிவான நிலைப்பாட்டில் உள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் தெளிவாக பல விடயங்களை குறிப்பிட்டிருந்தார். இலங்கை போன்ற நாட்டில் இவை கடுமையான பிரச்சினைகளாக கருதப்படுகின்றன. ஆனால் அவை எளிதான விடயங்களாக இருந்திருந்தால் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஓரிரு வாரங்களில் முன்னெடுத்திருக்கும். இது எளிதானது அல்ல. அரசாங்கத்தில் காணப்படக் கூடிய பிளவுகள் முன்னகர்வுகளுக்கு தடையாகி விடக் கூடாது. அனைத்து வகைகளிலும் அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம். சவால்களை சமாளிக்க உதவும் வழிகளைக் கண்டுபிடித்து முன்னோக்கி நகர்த்த வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் சிபாரிசுகள் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் நம்பகத்தன்மையை அரசாங்கம் எதிர்வரும் அமர்வுகளில் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. நீண்ட மோதலின் பின்னர் அடைய வேண்டிய இலக்குகள் குறித்து இலங்கை அறிந்துள்ளது. அவை நம்பகமான முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM