முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணியாக எதிர்வரும் தேர்தல்களில் களமிறங்க வேண்டும். அல்லாது போனால் தற்போது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களிலும் சிறுபான்மையாக மாற வேண்டிய அபாயம் உள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸனலி தெரிவித்தார்.
முஸ்லிம் கட்சிகளை இணைத்து முஸ்லிம் கூட்டணி அமைக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் இணைந்து கூட்டணியாக செயற்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக உள்ளனர். எனவே எதிர்நோக்கும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அதில் முஸ்லிம் கட்சிகள் கூட்டணியாகக் களமிறங்க வேண்டும். அல்லாது போனால் தற்போதைய அரசியல் நிலவரத்தில் முஸ்லிம்களின் பல்வேறு அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படும்.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றபோதிலும் அதற்கு உரிய தீர்வு முன்வைக்கப்படுவதாக இல்லை. எனவே முஸ்லிம்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அரசியல் ரீதியில் முஸ்லிம் அணியொன்றின் அவசியம் தேவையாக உள்ளது. முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்படாமையினால்தான் அவர்களின் வாக்கு வங்கியைப் பயன்படுத்தி பெரிய கட்சிகள் இலாபமடைகின்றன. ஆகவேதான் முஸ்லிம் கூட்டமைப்பை அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மாவட்ட மட்டத்தில் கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை தற்போது முன்னெடுத்து வருகிறோம். அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அக்கட்சிகள் கொள்கையளவில் உடன்பட்டுக்கு வந்துள்ளன.
எனவே சகல முஸ்லிம் கட்சிகளும் இக்கூட்டமைப்பில் இணைந்து செயற்படுவதற்கு முன்வரவேண்டும். அவ்வாறு செயற் பட்டால்தான் நாட்டில் நிலவும் முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு இயன்றளவு தீர்வுகாண முடியும் எனவும் அவர் மேலும் தெரி வித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM