ஐக்கிய தேசியக் கட்சியின் இனவாதமும் பழிவாங்கல் செயற்பாடுமே கறுப்பு ஜூலை க்கு காரணமாகும். அன்று செய்த அதே தவறை இன்று மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சி செய்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. மீண்டும் நாட்டில் இனவாதத்தை பலப்படுத்தி இனவாதத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனவும் அக்கட்சி தெரிவித்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் சோசலிஷ இளைஞர் அமைப்பு நேற்றுமுன்தினம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் இணைப்பாளர் எரங்க குணசேகர தெரிவிக்கையில்,
இலங்கையில் கறைபடிந்த சம்பவமே 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை சம்பவம். ஒரு மாதமாகும். நாட்டில் இடம்பெற்ற இனவாத அடைக்குமுறை இலங்கையர்களுக்கு மட்டும் அல்லாது சர்வதேச நாடுகளுக்கும் இலங்கை மீதான அவப்பெயரை உருவாக்கிய சம்பவமாகும். யாழ்ப்பாணத்தில் குண்டு வெடிப்பில் 13 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் விளைவு அடுத்த மூன்று தினங்களில் தமிழ், சிங்கள மக்களின் உடல்கள் எரிக்கப்பட்டன. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
சிறைச்சாலைக்குள் இருந்த தமிழ் கைதிகள் மோசமான முறையில் கொலைசெய்யப்பட்டனர். அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் இந்த அழிப்புக்கு காரணமாக அமைந்தனர். தமிழ் சிங்கள முஸ்லிம் இனவாத நடவடிக்கைகள் பரப்பிய அப்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளின் விளைவுகள் இறுதியில் நாட்டில் பயங்கரவாதம் ஒன்று உருவாகவும், நாட்டில் சிங்கள தமிழ் இனவாத அரசியல் ஒன்று உருவாகவும் காரணமாக அமைந்தன. புலிகள் என்ற பலமான அமைப்பு ஒன்று உருவாகவும் ஐக்கிய தேசியக் கட்சியே காரணமாகும்.
நாட்டில் சிங்கள இனவாதத்தை ஐக்கிய தேசியக் கட்சி பரப்பிய அதே நிலையில் தமிழ் பயங்கரவா திகள், அரசியல்வாதிகள் தமிழ் இனவாதத்தை பரப்பினர். இவற்றின் இறுதி விளைவாக ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். நாட்டில் பாரிய சேதங்கள் ஏற்பட்டன அநாதைகளாக பலர் மாற்றப்பட்டனர். இப்போது வரையில் அதன் தாக்கம் நாட்டில் உள்ளது. தேசிய நல்லிணக்கத்தை யுத்தத்தினால் உருவாக்கிவிட முடியாது.
யுத்தத்திற்கு அப்பால் சென்று ஒரு பலமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க இப்போது நல்ல வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சிய எவ்வாறு இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்து சென்றதோ அதேபோல் இன்றும் அதேபோன்றதொரு நிலைமையை நாட்டில் உருவாக்கி வருகின்றது. மீண்டு நாட்டில் இனவாதத்தை பலப்படுத்தி அதற்கு உயிர் கொடுக்கும் வகையில் இந்த அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
மீண்டும் நாட்டில் இனவாதத்தை உருவாக்க, மோதல்களை உருவாக்க முன்னைய ஆட்சியாளர்களும் இன்று ஆட்சி செய்பவர்களும் முயற்சித்து வருகின்றனர். தமது அரசியல் நோக்கத்திற்காக மீண்டும் இவர்கள் இனவாதத்தை கையில் எடுக்கப்பார்க்கின்றனர். கடந்த ஆட்சியில் அரசாங்கத்தின் மூலம் வளர்த்துவிடப்பட்ட சில சேனாக்கள் இருந்தனர். இவர்கள் மூலமாக நாட்டில் மிகவும் மோசமான வகையில் இனவாதம் பரப்பப்பட்டு வந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் நிலைமைகள் மாறும் என கூறப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கமும் அதே விளையாட்டை விளையாட ஆரம்பித்துள்ளது.
நாட்டில் இனவாதம் செய்தவர்களுக்கு உடனடியாக பிணை கிடைக்கின்றது. ஆனால் சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக போராடிய எமது சகோதரர்கள் இன்றும் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலத்தில் கடைகள் எரிக்கப்பட்டன. பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டன. இந்த செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இதுவரையில் எந்தவித தீர்வும் பெற்றுக் கொடுக்கவில்லை. இனவாதத்தை தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண் டும்.
ஆனால் அரசாங்கம் இந்த விடயங்களில் மௌ னம் காக்கின்றது. அதேபோல் இந்த அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வை கொடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. உமா ஓயா பிரச்சினை, டெங்கு நோய் பிரச்சினை, சைட்டம் பிரச்சினை, தொழிலாளர், விவசாயிகள் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. ஆனால் இவற்றில் தீர்வை பெற்றுக் கொடுக்காது சுயநல அரசியல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆகவே இவற்றில் மாற்றம் ஏற்பட வேண்டும். மக்கள் மத்தியில் இனவாதம் நீக்கப்பட்டு ஐக்கியம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் ஐக்கி
யமாக நாம் முன்னோக்கி செல்ல முடியாது. தமிழ
ர்களோ, சிங்களவர்களோ அனைவரும் இலங்கையர்கள் என்ற நிலைமைக்கு வரவேண்டும். ஆகவே மக்கள் இப்போது தெளிவாக சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் அக்கட்சி குறிப்பிட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM