நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை எவ்வித கொடுப்பனவுமின்றி கிடைக்கப்பெற்றது.!

Published By: Robert

21 Jul, 2017 | 09:16 AM
image

நெவில் பெர்­னாண்டோ வைத்­தி­ய­சா­லையை எந்­த­வி­த­மான கொடுப்­ப­ன­வு­மின்றி அதன் உரி­மை­யாளர் அர­சாங்­கத்­திற்கு கொடுத்­து­விட்டார். இவ்­வாறு அந்த வைத்­தி­ய­சா­லையை நெவில் பெர்­னாண்டோ வழங்­கி­யுள்­ள­மையை ஒரு­சில தரப்­புக்­க­ளினால் சகித்­துக்­கொள்ள முடி­யாமல் உள்­ளது. அதனால்  வீண் பிரச்­சி­னை­களை உரு­வாக்­கிக்­கொண்­டுள்­ளனர் என்று இணை அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான  ராஜித சேனா­ரட்ன தெரி­வித்தார்.  

அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று முன்தினம் நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், 

நெவில் பெர்­னாண்டோ வைத்­தி­ய­சா­லையை எந்­த­வி­த­மான கொடுப்­ப­ன­வு­மின்றி அதன் உரி­மை­யாளர் அர­சாங்­கத்­திற்கு கொடுத்­து­விட்டார். இவ்­வாறு அந்த வைத்­தி­ய­சா­லையை நெவில் பெர்­னாண்டோ வழங்­கி­யுள்­ள­மையை ஒரு­சில தரப்­புக்­க­ளினால் சகித்­துக்­கொள்ள முடி­யாமல் உள்­ளது. ஆனால் எந்­த­வி­த­மான கட்­ட­ணமும் இல்­லாமல் அர­சாங்கம் இந்த வைத்­தி­ய­சா­லையை பெற்­றுக்­கொண்­டுள்­ளது.  

கேள்வி:  அதன்  தலை­வ­ராக தொடர்ந்து நெவில் பெர்­னாண்­டோதான் நீடிப்­பாரா?

பதில்: தயவு  செய்து மூளையை பயன்­ப­டுத்தி கேள்வி கேளுங்கள்,   நெவில் பெர்­னாண்டோ தனது வைத்­தி­ய­சா­லையை அர­சாங்­கத்­திற்கு கொடுத்­து­விட்டார். இதன்­பின்னர்   இது­ தொ­டர்பில் பேசு­வ­தற்கு என்ன  இருக்­கி­றது. இந்த வைத்­தி­ய­சா­லையின் தலை­வரை நானே தீர்­மா­னிப்பேன். இது இனி அர­சாங்­கத்தின் சொத்து, நெவில் பெர்­னாண்டோ அதனை இல­வ­சமாக அர­சாங்­கத்­திற்கு கொடுத்­துள்­ளதால் அதனை ஒரு­சி­லரால் சகித்­துக்­கொள்ள முடி­யாமல் உள்­ளது. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடி­யாது.  அந்த வைத்­தி­ய­சா­லைக்­கான கட­னையும்  நெவில் பெர்­னாண்­டோவே செலுத்­துவார். அதிலும் நாங்கள் பங்­க­ளிப்பு செய்­ய­மாட்டோம். எனினும்  நீங்கள்   ஒரு­சில  பைத்­தி­யக்­கா­ரர்கள்  கூறு­வதை  கொண்டு என்­னிடம் கேள்வி எழுப்­பு­கின்­றீர்கள். சற்று சிந்­தித்து ஆராய்ந்து கேள்வி எழுப்­புங்கள்.

கேள்வி: சைட்­டத்­திற்கு என்ன நடக்கும்?

பதில்: அந்த நிறு­வ­னத்தின் முகா­மையும் மூல­த­னமும் விரி­வு­ப­டுத்­தப்­படும். மருத்­து­வத்­தரம் உறு­தி­செய்­யப்­படும். மாண­வர்­க­ளுக்­கான பயிற்சித் திட்­டங்கள் விஸ்­த­ரிக்­கப்­படும். இவ்­வாறு இதனை சிறப்­பாக முன்­னெ­டுப்போம். 

கேள்வி: இந்த விவ­கா­ரத்தை தீர்ப்­ப­தற்கு   ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தயார் என்றும்  ஆனால் நீங்­கள்தான் குழப்­பு­வ­தா­கவும் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கின்­றதே?

பதில்: ஜனா­தி­ப­தியும் பிரதமரும் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டால் அதனை  அமைச்சரால் குழப்ப  முடியுமா? உலகில் யாராவது ஒரு முட்டாள் இவ்வாறு செய்வாரா? இங்கு  ஜனாதிபதியிடம்  அரச மருத்துவ  அதிகாரிகள் சங்கம் பேசுவது ஒன்று,   வெளியில் வந்து செய்வதொன்று. இதுதான் பிரச்சினைக்கு காரணம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40