நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை எந்தவிதமான கொடுப்பனவுமின்றி அதன் உரிமையாளர் அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டார். இவ்வாறு அந்த வைத்தியசாலையை நெவில் பெர்னாண்டோ வழங்கியுள்ளமையை ஒருசில தரப்புக்களினால் சகித்துக்கொள்ள முடியாமல் உள்ளது. அதனால் வீண் பிரச்சினைகளை உருவாக்கிக்கொண்டுள்ளனர் என்று இணை அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை எந்தவிதமான கொடுப்பனவுமின்றி அதன் உரிமையாளர் அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டார். இவ்வாறு அந்த வைத்தியசாலையை நெவில் பெர்னாண்டோ வழங்கியுள்ளமையை ஒருசில தரப்புக்களினால் சகித்துக்கொள்ள முடியாமல் உள்ளது. ஆனால் எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் அரசாங்கம் இந்த வைத்தியசாலையை பெற்றுக்கொண்டுள்ளது.
கேள்வி: அதன் தலைவராக தொடர்ந்து நெவில் பெர்னாண்டோதான் நீடிப்பாரா?
பதில்: தயவு செய்து மூளையை பயன்படுத்தி கேள்வி கேளுங்கள், நெவில் பெர்னாண்டோ தனது வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டார். இதன்பின்னர் இது தொடர்பில் பேசுவதற்கு என்ன இருக்கிறது. இந்த வைத்தியசாலையின் தலைவரை நானே தீர்மானிப்பேன். இது இனி அரசாங்கத்தின் சொத்து, நெவில் பெர்னாண்டோ அதனை இலவசமாக அரசாங்கத்திற்கு கொடுத்துள்ளதால் அதனை ஒருசிலரால் சகித்துக்கொள்ள முடியாமல் உள்ளது. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. அந்த வைத்தியசாலைக்கான கடனையும் நெவில் பெர்னாண்டோவே செலுத்துவார். அதிலும் நாங்கள் பங்களிப்பு செய்யமாட்டோம். எனினும் நீங்கள் ஒருசில பைத்தியக்காரர்கள் கூறுவதை கொண்டு என்னிடம் கேள்வி எழுப்புகின்றீர்கள். சற்று சிந்தித்து ஆராய்ந்து கேள்வி எழுப்புங்கள்.
கேள்வி: சைட்டத்திற்கு என்ன நடக்கும்?
பதில்: அந்த நிறுவனத்தின் முகாமையும் மூலதனமும் விரிவுபடுத்தப்படும். மருத்துவத்தரம் உறுதிசெய்யப்படும். மாணவர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் விஸ்தரிக்கப்படும். இவ்வாறு இதனை சிறப்பாக முன்னெடுப்போம்.
கேள்வி: இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தயார் என்றும் ஆனால் நீங்கள்தான் குழப்புவதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றதே?
பதில்: ஜனாதிபதியும் பிரதமரும் ஒரு தீர்மானத்தை எடுத்துவிட்டால் அதனை அமைச்சரால் குழப்ப முடியுமா? உலகில் யாராவது ஒரு முட்டாள் இவ்வாறு செய்வாரா? இங்கு ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பேசுவது ஒன்று, வெளியில் வந்து செய்வதொன்று. இதுதான் பிரச்சினைக்கு காரணம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM