மனிதனால் உருவாக்கப்பட்டு சூழலுக்கு விடுவிக்கப்பட்ட பிளாஸ்டிக்கின் அளவு முதல் தடவையாக கணிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் முதன் முதலாக பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்ட 1950 ஆம் ஆண்டிலிருந்து 9.1 பில்லியன் தொன் பிளாஸ்டிக் மனிதர்களால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இது 90,000 ஈபில் கோபுரங்கள் அல்லது 1.2 பில்லியன் ஆபிரிக்க யானைகள் ஆகியவற்றின் நிறைக்கு சமனானதாகும். அத்துடன் இந்த பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி அமெரிக்க மான்ஹெட்டன் நகரை 2 மைல் உயரத்துக்கு மூட முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி பிளாஸ்டிக்கில் 9 சதவீதம் மீள் சுழற்சிக்கும் 12 சதவீதம் எரித்தலுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 5.6 பில்லியன் தொன் பிளாஸ்டிக்கால் உலகம் மாசாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கலிபோர்னிய பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு கூறுகிறது.
மேற்படி பிளாஸ்டிக் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 2050 ஆம் ஆண்டுக்குள் எமது சுற்றுச்சூழலுக்கு சுமார் 12 பில்லியன் மெற்றிக் தொன் பிளாஸ்டிக் விடுவிக்கப்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM