மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர். அதனை நிராகரிக்க அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என மேல் மாகாண முதலமைச்சர் இசறு தேவப்பிரிய தெரிவித்தார்.
மேல் மாகாணசபை முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவரினால் கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியைப்போன்று ஜனநாயகம் மிக்க தலைவர் இதன் பிறகு நாட்டுக்கு கிடைக்குமா என்று தெரிவிக்க முடியாது.
அதனால்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அவரை கட்சியின் தலைவராக ஏகமனதாக ஏற்றுக் கொண்டது. அத்துடன் அவர்மீது வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினர் அவருடன் இணைந்திருக்கின்றனர்.
அத்துடன் அடுத்துவரக்கூடிய 2020 ஜனாதிபதி தேர்தலிலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவே போட்டியிடுவார். அது கட்சின் தீர்மானமாகும். அதனை ஜனாதிபதி நிராகரிக்க முடியாது.
கேள்வி, ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடப் போவதில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளாரே?
பதில்: பொது வேட்பாளராக இருக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். ஆனால் அவர் இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர். அதனால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது என அவருக்கு தனித்து தீர்மானம் எடுக்கமுடியாது.
கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், அவர் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை மீறியதாக குற்றம் சாட்டப்படுவாரே?
பதில்: அவ்வாறு இல்லை, ஜனாதிபதி பொதுவேட்பாளராக இருக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். அப்போது அவருக்கு எதனையும் தெரிவிக்கமுடியும். நான் மாகாணசபை உறுப்பினராக இருக்கும்போது பல விடயங்களையும் தெரிவிக்க முடியும். ஆனால் தற்போது முதலமைச்சராக இருக்கும் நிலையில் என்னால் தனித்து ஒருவிடயத்தை தெரிவிக்க முடியாது.
அதனால் பொதுவேட்பாளராக இருக்கும் போது தெரிவித்த விடயங்களை இப்போது சம்பந்தப்படுத்த முடியாது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்றவகையில் கட்சிக்கு கட்டுப்பட்டே நடக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM