கூட்டு அரசாங்கத்தில் தம்முடன் கூடி ஆட்சி செய்யும் மற்றைய தரப்பு நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதையே கொள்கையாக கொண்டுள்ளதாக பெருந்தெருக்கள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நினைவுச்சின்னம் வழங்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
துறைமுக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் அமைச்சர் மஹிந்த சமரசிங்க முதுகெலும்பு இருக்கின்ற ஒருவர் என்ற வகையில் சரியான தீர்மானத்தை எடுத்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையினை விற்பனை செய்யாமல் அதனை தனியாருக்கு வழங்காமல் இலங்கை துறைமுக அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளார்.
எமது கட்சியின் அரசாங்கம் ஒன்று இருக்கின்ற போது எந்த பிரச்சினையும் இல்லை. தீர்மானங்களை எடுப்பதும் கடினமான விடயம் இல்லை. ஆனால் கூட்டு அரசாங்கத்தில் சரியான தீர்மானங்களை எடுப்பது கடினமான ஒன்றாகும்.
அமைச்சர் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்தின் விளைவாக துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையினை காப்பாற்றிய பெருமையும் மகிழ்ச்சியும் அதிகாரசபையின் தொழிலாளர்களுக்கும் இருக்கும்.
குறிப்பாக கூட்டு அரசாங்கம் என்று கூறுகையில் எம்முடன் சேர்ந்து ஆட்சி செய்யும் மற்றைய தரப்புக்கள் நாட்டின் தேசிய வளங்களை விற்பனை செய்வதையே கொள்கையாக கொண்டுள்ளது. அவ்வாறு இருக்கின்ற போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க எடுத்த தீர்மானம் வரவேற்புக் குரியது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM