இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நகர்வுகள் உள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத் துறையை உடனடியாக முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறும் அமெரிக்க பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிட்டுள்ள நிலையில் இலங்கையின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு நகர்வுகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக இலங்கை பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்க பாதுகாப்பு அறிக்கை யின் பிரகாரம் இலங்கையில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகளின் நகர்வுகள் உள்ளதாகவும் இலங்கையின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புப் படைகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு தரப்பின் 2016 ஆண்டுக்கான பாதுகாப்பு அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கை பாதுகாப்பு விடயத்தில் முப்படைகளின் செயற்பாடுகள் துல்லியமாக உள்ளதாகவும் புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருவதாகவும் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர். இலங்கை யில் இதுவரையில் எந்தவித பயங்கரவாத நகர்வுகளும் இடம்பெறவில்லை எனவும் சர்வதேச நாடுகளின் மூலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பயங்கரவாத செயற்பாடுகள் இலங்கையில் செயற்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பாதுகாப்பு தரப்புடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும், கடல் மற்றும் ஆகாய மார்க்கமாக பாதுகாப்புக் கண்காணிப்பு கள் இடம்பெறுவதாகவும், பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எனினும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி கடந்த ஆண்டு குறிப்பிட்ட தகவலில் 36 இலங்கையர்கள் இலங்கையில் இருந்து சிரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும் ஐ.எஸ். பயங்கரவாத குழுவில் இவர்கள் இணைந்துள்ளனர் எனவும் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக் ஷ பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை யில் இலங்கையை சேர்ந்த நன்கு கற்ற 32 முஸ்லிம் நபர்கள் ஐ.எஸ். பயங்கரவாத குழுவில் இணைந்துள்ளனர் என்ற தக வலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM