அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் இம்மாத இறுதியில் சீனாவிற்கு 85 வீதம் இலங்கைக்கு 15 வீதம் என்ற அடிப்படையில் கைச்சாத்திடப்படவுள்ளதென துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அதேநேரம் இந்தியாவின் உதவியுடன் காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி பணிகளையும் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 38 ஆண்டுகள் பூர்த்தியாகுவதை முன்னிட்டு ஓய்வுப் பெற்ற ஊழியர்களிற்கு நினைவுச்சின்னங்களை வழங்கி வைக்கும் நிகழ்வினை துறைமுகங்கள் மற்றும் சமுத்திரவியல் பயிற்சிநிலையத்தில் ஊழியர்கள் சங்கம் நேற்று நடத்தியது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் முன்பே பிரச்சினையை பெரிதும் ஆராய்ந்து பார்த்துள்ளேன். அதன்போது கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையை தனியாருக்கு வழங்க எடுத்த முடிவு மிகத்தவறானது என அறிய முடிந்தது.
எனவே அந்த இறங்குதுறை 100 வீதம் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழிருக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் அந்த தீர்மானத்திலேயே இருக்கின்றார்.
அதேநேரம் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்த விவகாரத்தை ஆராய்ந்து பார்த்ததில் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை முறையாக நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த துறைமுகத்தை இன்று வலுவான பொருளாதார செயற்பாடுகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பதையும் அறிய முடிந்தது.
எனவே அம்பாந்தோட்டை ஒப்பந்தத்தில் 85 வீதத்தினை சீனாவிற்கும் 15 வீதத்தினை இலங்கைக்கும் வழங்கும் வகையிலான ஒப்பந்தத்தில் இம்மாத இறுதியில் கைச்சாத்திடவுள்ளோம். மறுமுனையில் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்கு துறையினையும் குறித்த நிறுவனத்திற்கு மேற்குறித்த சதவீத அடிப்படையிலேயே வழங்கவுள்ளோம். காரணம் இன்று உலக நாடுகளின் கம்பனிகள் இலாப நோக்கில் கூட்டு வியாபார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக பாரிய அளவிலான கப்பல்களை பயன்படுத்துகின்றன. அவ்வாறான கப்பல்களை நங்கூரமிட துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான இறங்குதுறைகளில் இட வசதி போதாமல் உள்ளது. எனவே கிழக்கு இறங்குதுறையின் அபிவிருத்தி பணிகளும் வருகின்ற இரு மாதங்களில் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான இயந்திரங்களை கொள்வனவு செய்வதற்கான அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.
அதேபோல் இன்று ஒலுவில் துறைமுகத்தை மேற்பார்வை செய்யவுள்ளேன். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை துறைமுகத்திற்கும் செல்லவுள்ளேன். அதன் போது ஒழுவில் துறைமுக விவகாரம் குறித்து பெரிதும் அவதானம் செலுத்துகின்ற அதேநேரம் திருமலை துறைமுக அபிவிருத்தி குறித்தும் ஆராயவுள்ளேன்.
மேலும் காலி துறைமுகத்தினை பார்வையிடவும் எதிர்பார்த்துள்ள நிலையில் அதன் பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்தை மேற்பார்வை செய்யவுள்ளேன். காங்கேசன் துறை துறைமுகத்தின் அபிவிருத்திக்கு இந்
தியா 42 மில்லியன் ரூபாவை அன்பளிப்பாக வழங்கவுள்ளது. இந்தச் செயற்பாடுக ளையடுத்து துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினரின் சேவைக்காலத்தையும் 60 வயது வரையில் நீடிப்பதற்கான அனுமதியும் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM