ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பங்களாதேஷுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயமானது மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. இதன்போது 14 உடன்படிக்கைகள் இரண்டு நாடுகளுக்கிடையில் செய்துகொள்ளப்பட்டன என்று வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்:
பங்களாதேஷ் நாட்டின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். இது பயன்தரும் விஜயமாக அமைந்தது. இந்த விஜயத்தின்போது இரண்டு நாடுகளுக்குமிடையில் 14 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.
சேவைத்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. மேலும் இரண்டு நாடுகளுக்கிடையில் முதலீடுகளை அதிகரித்துக்கொள்வதற்கும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.
இந்த விஜயம் தொடர்பாக பல்வேறு தவறான கருத்துக்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இலங்கை வர்த்தக சபையின் பிரதிநிதிகள் இந்த விஜயத்தில் பங்கேற்றனர். அதற்காக அரசாங்கம் நிதி செலவிடவில்லை. எனினும் பல தவறான தகவல்கள் வெளிவந்தன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து அமைத்துள்ள கூட்டணி ஆட்சி தொடர்பில் பங்களாதேஷில் சிறந்த பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் மிகவும் வெற்றிகரமான ஒரு விஜயம் மேற்கொள்ளப்பட் டது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM