பலத்த எதிர்பார்ப்புடன் காத்திருங்கள். பிணைமுறி விசாரணையோடு தொடர்புடைய முக்கிய நபரொருவர் எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி ஆணைக்குழுவில் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி தெரிவித்தார்.
நேற்றுக் காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிய பிணைமுறி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் மத்திய வங்கியின் பொதுக்கடன் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகர் கமகே பிரபாத்தின் சாட்சிப்பதிவுகளோடு ஆரம்பமாகின.
சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரத்தின் முக்கிய காலகட்டமாக கருதப்படும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி கருதப்படுகின்றது. குறித்த காலப்பகுதியில் மத்திய வங்கியின் பொதுக்கடன் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி தொடர்பான அனைத்து ஆவணக்காப்புக்களும் சாட்சிப்பதிவுகளுக்காக மீள்பரிசோதனை செய்யப்பட்டன.
பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களான உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டீ. சித்திரசிறி, பி.எஸ்.ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற பிரதி கணக்காய்வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையில் இந்த விசாரணைகள் இடம்பெற்றன.
கொழும்பு - புதுக்கடையில் உள்ள நீதியமைச்சின் கட்டடத் தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அறையில் இந்த விசாரணைகளை ஆரம்பித்து முதலில்
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நிஹால் பெர்னாண்டோவின் நெறிப்படுத்தலுடன் சாட்சி விசாரணைகள் ஆரம்பமாகின.
இதன்போது 2015 ஆம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கியின் ஆவணக்காப்புக்களை சரிபார்த்து கூறியதுடன் பேப்பச்சுவல் நிறுவனத்துடனும் ஏனைய முதலீட்டு நிறுவனங்களுடனும் ஏலத்தின் கொடுக்கல் – வாங்கல்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.
மத்திய வங்கியின் பொதுக்கடன் திணைக்களத்தின் பிரதி அத்தியட்சகர் கமகே பிரபாத்தின் சாட்சிய பதிவுகள் நிறைவடைந்தவுடன் அடுத்த விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் எனவும் எதிர்பார்த்து காத்திருங்கள் எனவும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM