முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த கேப்பாப்புலவு பகுதியில் 189 ஏக்கர் விஸ்தீரணமான காணிகளை மீண்டும் அவற்றின் முன் உரித்தாளிகளிடம் கையளிக்கும் முகமாக முல்லைத்தீவு மாவ ட்ட செயலாளரிடம் நேற்று (நேற்று முன் தினம்) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கேப்பாபுலவு பகுதியில் 189 ஏக்கர் விஸ்தீரணமான காணிகள் நேற்றுமுன்தினம் மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட இருந்தன எனினும் விடுவிக்கப்பட்ட காணிகளில் நிலவும் பிரச்சினைகளும் பாதுகாப்புத் துறையினர் வசமுள்ள ஏனைய காணிகளை விடுவித்துக் கொள்வதற்கு கேப்பாபுலவு பகுதியில் இருந்த மக்களின் எதிர்ப்பும் காரணமாக அக்காணிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்க முடியாமல் போனது. எனினும் அவற்றின் முன் உரித்தாளிகளிடம் கையளிப்பதற்காக நேற்றுமுன்தினம் குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
மேலும் பாதுகாப்புத் துறையினர் வசமுள்ள மக்களுக்குச் சொந்தமான காணிகள் சம்பந்தமாக தீர்மானம் எடுப்பதற்கு ஜூலை மாதம் 26 ஆம் திகதி மு.ப. 10.00 மணிக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சில் விசேட கலந்துரையாடலொன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் பாதுகாப்புத்துறை பிரதானிகள் மற்றும் கேப்பாபுலவு காணி உரித்தாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 6 பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அவர்கள் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM