பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ நகரிலிருந்து என்.சி. எனும் போதை பொருள் 25 சிறிய டின்களை கொண்டு செல்ல முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. பொகவந்தலாவ நகரிலிருந்து தோட்டப்பகுதிக்கு இரவு 9.00 மணியளவில் மிகவும் சூட்சமமான முறையில் எடுத்து செல்ல முற்பட்ட போது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேக நபர்கள் இன்று பொலிஸ் பிணையில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், எதிர்வரும் 25ம் திகதி குறித்த இரு சந்தேக நபர்களை ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து என்.சி, மாவா, போதை மாத்திரைகள் போன்ற மலையகத்தின் பல்வேறு பிரதேசங்களில் விற்பனை செய்துவருவது குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM