முத்துராஜவல பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கு, கொழும்பு மாநகர சபைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்பிரகாரம், குறித்த தடை உத்தரவை எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி வரை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
இது தொடர்பில் முத்துராஜவல பகுதியைச் சேர்ந்த 35 பேரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு கடந்த ஜூலை 5 ஆம் திகதி, உச்ச நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, கொழும்பு நகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை முத்துராஜவல பிரதேசத்தில் கொட்டுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்தது.
இந்நிலையில் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவை மீண்டும் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவின் பிரதிவாதிகளாக கொழும்பு மாநகர சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது டெங்கு நோய் தீவிரமாக பரவி வரும் நிலையில், பாரிய பிரச்சினையாக காணப்படும் குப்பை தொடர்பான பிரச்சினைக்கு நீதிமன்றம் இந்த தடையுத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM