வாடகை வாகனமொன்றில் பயணம் செய்த நபரொருவர் அவ்வாகனத்தின் சாரதிக்கு குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அவரிடமிருந்து தங்கச் சங்கிலி உட்பட பணத்தினையும் அபகரித்துச் சென்ற சம்பவமொன்று தெல்தோட்டை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் இடம் பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
சம்பவதினம் கலஹா நகரிலிருந்து தெல்தோட்டை பகுதிக்கு நபரொருவர் முச்சக்கர வண்டிய ொன்றினை வாடகைக்கு அமர்த்திச் சென்றுள்ளார்.
இதன்போது தெல்தோட்டை கரகஸ்கட பிரதேசத்தில் குறித்த முச்சக்கர வண்டி யினை நிறுத்தச் செய்த குறித்த நபர், தாக மாக இருப்பதாக கூறி அருகிலிருந்த கடையொன்றுக்குச் சென்று குளிர்பான போத்தலொன்றினை வாங்கி குடித்துள்ளதுடன், தன்னுடன் வந்த சாரதிக்கும் குளிர் பான போத்தலொன்றினை வாங்கி கொடுத்துள்ளார். குளிர் பானத்தை பருகிய சாரதி மயக்கமுற்றதையடுத்து, அந் நபர் முச்சக்கர வண்டி சாரதி அணிந்திருந்த தங்கச் சங்கிலி உட்பட பணத்தினையும் அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
மயக்கமுற்றிருந்த சாரதியை பிரதேசவாசிகள் மீட்டு தெல்தோட்டை வைத்திய சாலையில் அனுமதித்துள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம தொடர்பான விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM