அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலியா பிஷப் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் இன்று எதிர்க்கட்சித் தலைரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பு இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலியா பிஷப் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவதை நோக்காக கொண்டே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மனை நாளை வெள்ளிக்கிழமை காலையில் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இச்சந்திப்பின் போது சமகால அரசியல் நிகழ்வுகள் உட்பட பல்வேறு விட யங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுமென தெரிவிக்கப்பட்டு ள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM