இலங்கை வருகிறார் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்

Published By: Digital Desk 7

19 Jul, 2017 | 11:51 AM
image

அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் இரு நாட்கள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளதாக இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் இலங்கைக்கிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பித்து 70 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்பின் வருகை முக்கியமானதாக அமைந்துள்ளது.

இவரின் வருகை இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவினை பலப்படுத்தும் முக்கிய அம்சமாக அமையும் என இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலம் மேலும் தெரிவித்துள்ளது.

பிராந்திய  பாதுகாப்பு, ஒத்துழைப்பு, விஞ்ஞான வளங்கள் மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் அபிவிருத்தி புதிய பொருளாதார வாய்ப்புகள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் கலந்துரையாடவுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பின் போது ஏற்கனவே உள்ள வலுவான இருநாடுகளுக்கிடையிலா இரு தரப்பு உறவுகளை அபிவிருத்தி செய்வதற்கான வழிகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

வெளிவிவகார அமைச்சரின் வருகையின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாக எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனுடனான சந்திப்பு அமையவுள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய வெளிவிவார அமைச்சர் ஜூலி பிஷப், இலங்கை முகம் கொடுக்கும் பாரிய சுகாதாரப் பிரச்சினையான டெங்கு நுளம்புகளை அழித்தல் மற்றும் டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கம் வழங்கவுள்ள உதவிகளை இவ் விஜயத்தின்போது அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13