ஆட்சியை விமர்சித்த நடிகர் கமலுக்கு எதிராக, அ.தி.மு.க. அமைச்சர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் கமலுக்கு அரசியலுக்கு வர தைரியம் இருக்கிறதா என அவர்கள் சவால் விடுத்துள்ளனர்.
'தமிழகத்தில், அனைத்து மட்டங்களிலும் ஊழல் மலிந்து விட்டது' என, நடிகர் கமல், சமீபத்தில் கூறியிருந்தார். இதற்கு, ஆளும் கட்சியினர் எதிர்ப்பும், எதிர்க்கட்சியினர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அ.தி.மு.க. அமைச்சர்கள் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,
ஜெயலலிதா இருக்கும் வரை வாயை மூடிக்கொண்டிருந்த கமல், இன்று வாயை திறப்பது வேடிக்கையாக உள்ளது. ஜெ. அரசு மீது சேறு பூசுவதால், பதில் கொடுக்கிறோம். அரசியலுக்கு வர அவருக்கு தைரியமில்லை. கமல் முட்டு கொடுக்கும் நிலையில் தி.மு.க. பரிதாபமான நிலை யில் உள்ளது.
ஜனநாயகம் குறித்து பேசி உள்ளார். குற்றச்சாட்டுக்கு பதில் கூறுவதும் ஜனநாயகம் தான். கருணாநிதி முதல்வராக இருந்த போது, அவர் பங்கேற்ற கூட்டத்தில், 'நடிகர்கள் மிரட்டப்படுகின்றனர்' என, நடிகர் அஜித் பேசிய போது, கமல் எங்கிருந்தார். அவர் யாருடைய ஊதுகுழலாக உள்ளார். குற்றச்சாட்டை ஆதாரத்துடன் கூறினால் பதில் தர தயார்.
ஏதோ பேசிவிட்டார் அவரை, ஸ்டாலின் வரவேற்றுள்ளார். எங்களை குற்றம் சொல்வோரை, ஸ்டாலின் வரவேற்பது ஆச்சர்யம் அல்ல. கமல், இவ்வாறு பேசுவது கவலையழிக்கின்றது என தெரிவித்துள்ளனர்.
எனினும் இந்நிலையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கமலின் கருத்துக்கு ஆதரவான வகையில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஜனநாயகத்தில், ஒரு ஆட்சி குறித்து கருத்து கூற, அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் கமல் தன் கருத்தை வெளியிட்டுள்ளார். இதற்காக அவரை எதிர்ப்பது நியாயமல்ல. ஆளும் கட்சியினர் இந்த ஆட்சியை வழிநடத்துவதில் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் கமலுக்கு ஆதரவாக தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஜனநாயக நாட்டில், எந்த குடிமகனுக்கும், ஆட்சியை விமர்சிக்கும் முழு உரிமை உண்டு. கமல் இந்த ஆட்சியை, விமர்சனம் செய்துள்ளார். அவரது விமர்சனத்தை ஆட்சியாளர்கள் பொறுமையாக கேட்டறிந்து, உரிய பதிலை தர வேண்டும். ஆட்சியாளர்கள் கோபப்படுவது, இயற்கைக்கு, அரசியல் தர்மத்திற்கு மாறான செயல். ஒருவர் குறை சொல்லும் போது, அதற்கு பதில் கூற வேண்டும். தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவோ, பழிக்கவோ கூடாது. கமலை குறை கூறினால் அவர்களின் மரியாதை தான் குறையும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM