2016 ஆம் ஆண்டில் மந்தமான பெறுபேற்றினை பதிவு செய்த கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் நடவடிக்கைகள் 2017ஆம் ஆண்டு முதலாம் அரையாண்டு வரையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை பதிவு செய்துள்ளது.
அந்த வகையில் கடந்த அரையாண்டு காலத்தில், அனைத்துப்பங்கு விலைச்சுட்டி (ASPI) 8.23% உறுதியான வளர்ச்சியினை பதிவுசெய்து, ஜுலை 17 ஆம் திகதி 6741.07 புள்ளிகளாகக் காணப்பட்டது. பாரிய மூலதனம் மற்றும் திரவத்தன்மை நிறைந்த பண்புசார் பட்டியற்படுத்தப்பட்ட 20 கம்பனிகளை உள்ளடக்கிய S&P SL 20 விலைச்சுட்டி 11.03% வளர்ச்சியினை முதல் அரையாண்டில் பதிவு செய்து, ஜூலை 17 ஆம் திகதி 3882.14 புள்ளிகளாகக் காணப்பட்டது. 2016 மற்றும் 2015 ஆண்டுகாலப் பகுதிகளில் முறையே 9.66% , 5.54% வருடாந்த வீழ்ச்சியினை வெளிப்படுத்திய அனைத்துப்பங்கு விலைச்சுட்டி (ASPI) 2017ஆம் ஆண்டில் வளர்ச்சியினை பதிவு செய்து கொண்டிருக்கின்றது.
2016ஆம் ஆண்டு 737.2 மில்லியன் ரூபாவாக காணப்பட்ட நாளாந்த சராசரி புரள்வு, 2017ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு சராசரியாக ரூபா. 911 மில்லியன் பதிவு செய்து, மொத்த வியாபார நடவடிக்கைகளும் துரிதமடைந்துள்ளது.
வெளிநாட்டுச் செயற்பாட்டுத் தூண்டல் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் முதலாம் வாரம் தொடக்கம் தொடர்ச்சியான 24 வாரங்களுக்கு தேறிய வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சலினைப் பதிவு செய்து, சந்தை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் முதலீட்டுக்கான ஆர்வத்தினை தன்வசப்படுத்தி இருக்கின்றது. குறிப்பிடத்தக்க அபிவிருத்தியாக 2017ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டுக்கான வெளிநாட்டுக் கொள்வனவு ரூபா 62.6 பில்லியன் ஆகப்பதிவு செய்து, 2016ஆம் ஆண்டின் முதலாம் அரையாண்டு ரூபா 31.5 பில்லியனைக் காட்டிலும் இருமடங்காகப் பதிவு செய்து நிதியாண்டுகளின் அரையாண்டிற்கான உச்சவரம்பாக அமைந்துள்ளது.
2017ஆம் ஆண்டில் தற்போது வரை தேறிய வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சல் ரூபா 23 பில்லியன் பதிவு செய்துள்ளது. இது கடந்து ஆண்டைக் காட்டிலும் ஓர் பாரிய அடைவாகும். குறிப்பாக 2016ஆம் ஆண்டு ரூபா 383.5 மில்லியன் முதலீட்டு உட்பாய்ச்சலினைப் பதிவு செய்திருந்தது, மாறாக 2015இல் ரூபா 5.3 பில்லியன் வெளிப்பாய்ச்சலாக அமைந்திருந்தது. 2012ஆம் ஆண்டு வரலாற்றில் அதிகூடிய தேறிய வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சல் ஆண்டாக அமைந்திருந்தது. 2012இல் முதல் அரையாண்டில் ரூபா 23.2 பில்லியன் பதிவாகியிருந்ததுடன், அந்த நிதியாண்டு முடிவில் உட்பாய்ச்சலாக ரூபா 38.6 பில்லியன் பதிவு செய்துள்ளது.
அண்மைக்காலத்தில், மத்திய வங்கியின் வெளியகத் துறைப் பெறுபேறுகள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டவாறு “பங்குச்சந்தை மற்றும் அரச பிணையங்களின் சந்தையில் தொடர்ச்சியாக தொடருகின்ற வெளிநாட்டு முதலீட்டு உட்பாய்ச்சல்கள் நாட்டின் சென்மதிநிலுவைக் கணக்கிற்கு உறுதுணையாக அமைந்துள்ளதாக ஏப்ரல் மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பேரினப் பொருளாதார அடிப்படையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நிலைமை 2016 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையே 42.0% , 34.4% ஆகக் காணப்பட்ட மொத்த சந்தைப் புரள்வில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்களிப்பு 2017ஆம் ஆண்டில் 47.2% வளர்ச்சியினை வழங்கியிருந்ததோடு, 2008ஆம் ஆண்டு தொடக்கம் தற்போது வரையான காலப்பகுதிகளில் முதற்தடவையாக இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 50% த்தினை தாண்டியுள்ளது. பிராந்திய சந்தைகளுடன் ஒப்பிடுகையில் கவர்ச்சிகரமான ஓர் விலை உழைப்பு, பட்டியற்படுத்தப்பட்ட கம்பனிகளின் அதிகரித்த இலாபம் மற்றும் ஓப்பீட்டளவில் விலைச்சுட்டிகளின் அசைவு மற்றும் உறுதியான செயலாற்றுகை என்பன வெளிநாட்டு முதலீடுகள் இலங்கை நோக்கி குவிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM