சிம்பாப்வே அணி இலங்கையை ஒருநாள் தொடரில் வீழ்த்தியது கிரிக்கெட்டின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
மும்பையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஷ்வின் கூறியதாவது:
சிம்பாப்வே அணி இலங்கையை வீழ்த்தியதைப் பற்றிக் கூற வேண்டுமெனில், யார் வேண்டுமானாலும் வெல்லலாம், யார் வேண்டுமானாலும் தோற்கலாம் இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்றுகிறது.
நாளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெறலாம். அப்படித்தான் ஒரு விளையாட்டு செல்ல வேண்டும். இது விளையாட்டுக்கு ஆரோக்கியமானது.
அதேவேளை இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து கேட்டபோது, புதிய பயிற்சியாளர் பற்றி கருத்துக் கூறுவது என் எல்லைக்குட்பட்டதல்ல. அப்படிப்பட்ட விடயங்களில் நான் கருத்து கூறுவது இல்லை.
நான் சமயோசிதமாகப் பேசவில்லை. அது குறித்து கருத்துக் கூறுவது நியாயமற்றது. எப்போதும் போலவே இந்திய அணி சென்று கொண்டிருக்கிறது. போகப்போகத்தான் இது எப்படி பயனளிக்கும் என்று கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM