இலங்கை கிரிக்கெட் அணி யின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸிடம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு நேற்று விசேட விசா ரணைகளை மேற்கொண்டு நீண்டசாட்சியம் ஒன்றினை பதிவுசெய்தது.
நடந்து முடிந்த மேற்கிந்தியதீவுகள் உடனான தொடரின் போது குஷல் ஜனித் பெரேரா வும் ரங்கன ஹேரத்தும் வலை பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த போது, வலை பயிற்சி உதவியாளர் ஒருவர் ஊடாக இருவரையும் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுத்த முயற்சிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த சாட்சியப் பதிவுகள் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பின் பிரகாரம் நேற்று காலை 9.45 மணிக்கு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னிலையில் ஆஜரான அஞ்சலோ மெத்தியூஸிடம் சுமார் 5 மணி நேரம் வரை விசாரணைகள் இடம்பெற்றதாகவும் அதன் போதே தேவையான சாட்சியம் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
தனது சட்டத்தரணி நிஸான் பிரேமரத்னவுடன் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்த அவர் புலனாய்வு அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தவாறு இந்த சாட்சியத்தை வழங்கியுள்ளார். அதன் படி நீண்ட வாக்கு மூலம் ஒன்றினை அளித்துள்ள மெத்தியூஸ் மாலை 4.00 மணியளவில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறிச் சென்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM