ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்வதற்கு யார் அனுமதி அளித்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத் தில் நேற்று அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது. இந்தக்கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றார்.
பென் எமர்சன் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்து கைதிகளை சந்தித்துள்ளார். எந்த அடிப்படையில் இவர் சிறைச்சாலைகளுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. யார் இதற்கான அனுமதியினை வழங்கியது. நீதி அமைச்சா, சிறைச்சாலை அமைச்சா, அல்லது வெளிவிவகார அமைச்சா இதற்கான அனுமதியை வழங்கியது யார் என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு இந்த மூன்று துறைகளைச் சேர்ந்த அமைச்சர்களும் இவ்விடயம் குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர். இந்த நிலையில் 2011 ஆம் ஆண்டு முன்னைய அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு காரணமாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் புரிந்துணர்வின் அடிப்படையில் இவ்வாறு அவர்கள் விரும்பிய இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM