இராமேஸ்வரத்தில் இருந்து ஒரு பெண்மணி அந்த மருத்துவரைப் பார்க்க சென்னைக்கு வருகிறார். அவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. அந்த மருத்துவர் சில ஆலோசனைகளை கூறவே அந்தப் பெண் நான்கு மாதத்தில் திரும்பி வந்து தான் கருவுற்றிருப்பதைச் சொல்லி நன்றி தெரிவிக்கிறார்.
முதலில் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பெண் இரண்டாம் முறை கருவுற்றிருக்கையில் அந்த மருத்துவரிடம் ஆலோசனைக்கு வருகிறார். முதன் முறை அறுவைச்சிகிச்சை நடந்திருந்தாலும் மறுமுறை சுகப்பிரசவம் சாத்தியமே என்று தனது அனுபவத்தில் நிகழ்ந்த சுகப்பிரசவக் கதைகளை எடுத்துச் சொல்லி நம்பிக்கை வார்த்தைகள் கூறி அவரை அனுப்பி வைக்கிறார். ஆறுமாதம் கழித்து தனக்கு சுகப்பிரசவம் நிகழ்ந்ததற்கு நீங்கள்தான் காரணம் எனக் கூறி நெகிழ்ச்சியாகப் பேசுகிறார்.
ஒரு பெண்மணி அந்த மருத்துவமனையில் வந்து அனுமதிக்கப்படுகிறார். குறைந்த அளவே பணம் பெறும் மருத்துவமனையாக இருந்தும் இவரால் அதைச் செலுத்துவது மிகக் கடினம் என்பதை அறிந்து தனது கட்டணம் மற்றும் தனது ஊழியர்களுக்கான தொகையில் சிறிதளவு குறைத்துக்கொண்டு பிரசவம் பார்த்து அனுப்புகிறார்.
இப்படி யார் உதவி என வந்து நின்றாலும் அந்த மருத்துவரின் கண்களோடு இதயமும் இளகிவிடுகிறது.
பெண் குழந்தைகள் பிறந்த போதிலிருந்தே சரியான கவனிப்பும் அக்கறையும் வேண்டும். சிறு வயதில் இருந்து ஊட்டச்சத்துக் குறைபாடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய பெண்ணாகும் நேரத்தில் கூடுதல் கவனிப்பு அவசியம். ஒரு குழந்தையைத் தாங்கும் கருப்பையானது மிகவும் வலிமையுடையதாக இருப்பதற்கும், இடுப்பெலும்பு விறைப்புத் தன்மையோடு இல்லாமல் தளர்வுத் தன்மையோடு இருப்பதற்கும் உடற்பயிற்சியும் அவசியம் செய்தாக வேண்டும். தனியாக உடற்பயிற்சி என்றில்லாமல் வீட்டு வேலைகளைச் செய்தாலே போதுமானது. இன்று எல்லாவற்றுக்கும் கருவிகள் வந்துவிட்டதால்தான் கருவிலேயே பிரச்சினைகள் ஆரம்பித்துவிடுகிறது.
அதேபோல் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்ட எண்ணங்களோ, எதிர்மறை சிந்தனைகளோ இல்லாமல் இருப்பது மிக அவசியம். முதன் முறை சிசேரியன் ஆனாலும் அடுத்த முறை சுகப்பிரசவமாக வாய்ப்புகள் உண்டு. இன்று பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்குப் பின் சுகப்பிரசவம் என்பதை ஏற்றுக்கொள்ள. மறுக்கின்றனர். இலட்சத்தில் ஒரு பெண்ணுக்குத்தான் இரண்டாம் முறை சுகப்பிரசவத்தில் பிரச்சினை வரக்கூடும். இரண்டாம் பிரசவத்தை எதிர்கொள்ளும் அத்தனை பெண்களுக்கும் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்கு கருவுற்ற பெண்களே காரணமாக இருக்கின்றனர்.
அதனால் குடும்பத்தில் இருப்பவர்களும், மருத்துவரும் இணைந்து சுகப்பிரசவத்துக்கான வழிகளைப் பின்பற்ற கருவுற்ற பெண்ணுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM