அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் ஒழிக்­கப்­படல் வேண்டும்

Published By: Robert

18 Jul, 2017 | 01:37 PM
image

Image result for gmoa virakesari

நாட்டில் சுகா­தார அமைச்சின் ஆளணி பிரச்­சினை தீர்க்­க­ப்பட வேண்­டு­மாக இருந் தால் அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் ஒழிக்­கப்­படல் வேண்டும் என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ மட் தெரிவித்தார்.

காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில் கிழக்கு மாகாண சுகா­தார அமைச்­சினால் நிர்­மாணிக்­கப்­பட்­டுள்ள வைத்­திய நிபு­ணர் கள் தங்­கு­மிட விடுதி மற்றும் புன­ர­மைக்­கப்­பட்ட பல் வைத்­திய சிகிச்சை நிலையம் மற் றும் வெளிநோ­யாளர் பிரிவு என்­பன வியா­ழக்­கி­ழமை திறந்து வைக்கும் வைப­வத்தில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்­து­ரை­யாற்­றிய அவர் வைத்­திய நிபு­ணர்­க­ளுக்­காக அவர்­களின் ஆலோ­ச­னையைப் பெற்றுக் கொள்­வ­தற்­காக அவர்­க­ளுக்கு பணத்தை கட்டி விட்டு வரி­சையில் நின்று அவர்­களை சந்­தித்தால் அவர்­க­ளிடம் இரண்டு நிமிடம் கதைக்க முடி­யாத வைத்­திய நிபு­ணர்­க­ளாக இவர்கள் இருக்கும் போது ஏன் இங்கு சைட்டம் வரக்­கூ­டாது என கேள்வி எழும்­பு­கின்­றது.

இந்­தி­யா­வுக்கு சென்றால் வைத்­தி­யர்கள் சேவையை செய்­வ­தற்­காக காத்து கொண்­டி­ருக்­கின்­றனர். விமான நிலை­யத்தில் போய் இறங்­கி­ய­வுடன் அங்கு வாகனம் அனுப்­பவா என வைத்­திய நிபுணர்கள் நோயா­ளி­யி டம் கேட்கும் அள­வுக்கு அங்கு நிலைமை இருக்­கின்­றது. எல்லா வைத்­தி­யர்­க­ளையும் சொல்­ல­ மு­டி­யாது சிலர் இந்த நாட்டில் இந்த வைத்­திய சேவையை வியா­பார சேவை­ யாக மாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றார்கள். பணத்­தினை கொண்டு போய் வெளிநா­டு­களில் வைத்­தியத் துறையில் படித்து விட்டு அங்­கி­ருந்து வந்து இலங்­கையில் ஒரு பரீட்­சைக்கு தோற்றி அவர்கள் எல்லாம் உள்­வாங்­கப்­ப­டு­கின்­றனர். இந்த நிலை­மைகள் மாறா­த­ வ­ரைக்கும் சுகா­தார துறை­யி­லுள்ள எந்­த­வொரு பிரச்­சி­னை­யையும் தீர்க்க முடி­யாது. கிழக்கு மாகா­ணத்­திற்­கென தாதி­யர்­ களை கொண்டு வரு­வ­தற்கு கெஞ்சி கூத்­ தாட வேண்­டி­யுள்­ளது. இந்த நிலை ஏன் என நான் கேட்க விரும்­பு­கின்றேன்.

கிழக்கு மாகா­ணத்­திற்­கென தனி­யான ஒரு தாதியர் கல்­லூ­ரியை உரு­வாக்கி தமிழ் மொழி மூலம் அவர்­க­ளுக்கு கற்­பித்து இந்த மக்­க­ளுக்கு தமிழில் சேவை­யாற்­று­கின்ற ஒரு தனியார் தாதியர் கல்­லூ­ரியை ஏன் நம்மால் உரு­வாக்க முடி­யாது. அதை என்னால் செய்­ய­மு­டியும். அதற்கு அனு­மதி தாருங்கள் என நான் கேட்­கின்றேன் அதன் மூலம் வைத்­தி­ய­சா­லை­களில் தாதியர் பற்­றாக்­கு­றை­வான பிரச்­சி­னையை இல்­லாமல் செய்ய முடியும்.

இது நாசா­வுக்கு ரொக்கட் அனுப்­பு­கின்ற பெரிய பிரச்­சி­னை­யல்ல இந்த நாட்டில் ஒரு வைத்­தியர் இல­வ­ச­மாக கல்வி கற்­கின்றார். அவர் கல்வி கற்று அவர் வைத்­தி­ய­ராக வெளியில் வந்த பின்னர் அவரின் மனோ நிலை மாறு­கின்­றது.

இது வைத்­தி­யர்­களின் பிரச்­சி­னை­யல்ல. இந்த நாட்­டி­லுள்ள நிலைமை சட்டம் அவ்­வா­றுதான் இருக்­கின்­றது. ஒரு வைத்­தி­ய­சா­லைக்கு ஒரு காவ­லாளியை போட் முடி­யாது. ஆள­ணியை நிவர்த்தி செய்ய முடி­யாது. இதற்­கெல்லாம் இவர்­க­ளிடம் கை நீட்ட வேண்­டி­யுள்­ளது. மக்­களை ஏமாற்­று­கின்ற அர­சியல் அதி­காரப் பகிர்வு என்­கின்ற வார்த்­தைக்கு முற்­றுப்­புள்ளி வைக்க வேண்டும். இதை நாங்கள் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். யதார்த்­தங்கள் பிழை­யாக சொல்­லப்­ப­டு­கின்ற போது அவை­களை சுட்­டிக்­காட்­டாமல் இருக்க முடி­யாது. 

அரச மருத்­துவ அதி­கா­ரிகள் சங்கம் பிழை என அத்­தனை வைத்­தி­யர்­க­ளுக்கும் தெரி யும். அவர்­களின் நட­­வடிக்கை பிழை என அதி­க­மான வைத்­தி­யர்­க­ளுக்கு தெரியும் ஆனால் அவர்கள் அதற்கு கட்­டுப்­பட்­டுள்­ளார்கள். அவர்கள் அதற்கு கட்­டுப்­ப­டமால் விட்டால் அவர்கள் ஒதுக்­கப்­பட்­ட­வர்­க­ளாக மாற்­றப்­ப­டு­வார்கள்.

அர­சியல் தலை­மை­களும் வைத்­திய நிபுணர்­களும் ஒன்று சேர்ந்து பணி­யாற்ற வேண்டும். பிரச்­சி­னை­களைத் தீர்த்து வைக்க வேண்டும். வைத்­தியத் துறையை யாரும் செய்ய முடி­யாது. வைத்தி துறை என்­பது மிகவும் முக்­கி­ய­மா­னது. கதவை மூடி­விட்டு காலில் விழுந்து கெஞ்சிப் பெறு கின்ற நிலைமை தான் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண சபைக்கு இருந்தது.

அந்த நிலைமையை நாம் மாற்றியிருக் கின்றோம். அரசியல் அதிகாரத்தில் சொல் லப்பட்டுள்ள விடயங்களை போராடி பெற்று வருகின்றோம். கிழக்கு மாகாணத் தில் மிக முக்கிய மாகாண துறைகளில் ஒன்றான சுகாதாரத் துறையை முன்னேற்ற நாம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின் றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37