புதிய வருமான வரிச் சட்டமூலத்தினூடாக மதஸ்தலங்களுக்கு 14 சதவீத வரி அறவிடுவதற்கு அரசாங்கம் யோசனை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய வருமான வரிகள் சட்டமூலம் தொடர்பில் அஸ்கிரிய மாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை தெளிவூட்டும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன மாநாயக்க தேரரை நேற்று கண்டியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2006 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க தேசிய வருமான வரிகள் சட்டமூலத்தின் மூன்றாவது உறுப்புரைக்கமைவாக மதஸ்தலங்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள், சிறு மற்றும் மத்தியதர வர்த்தகர்களுக்கான வரி விலக்களிக்கப்பட்டிருந்தது. எனினும் புதிய வரி திருத்தச்சட்டமூலத்தினூடாக அவ்வரிவிலக்கு நீக்கப்பட்டுள்ளது.
எனவே மதஸ்தலங்கள் மற்றும் சமயஸ்தலங்கள் மீது அரசாங்கம் வரி அறவிட முனைவதையிட்டு மிகவும் கவலையடைய வேண்டியுள்ளது. இது சமயஸ்தலங்கள் மற்றும் கலாசார நிலையங்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையாகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM