ஜனாதிபதி அச்சத்தில்..!

Published By: Robert

18 Jul, 2017 | 12:10 PM
image

டிசம்பர் மாதத்­துக்கு முன்னர் சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தை­விட்டு செல்­வார்கள் என்ற அச்சம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்­றது. அத­னால்தான் டிசம்பர் 31வரை பொறுத்­தி­ருக்­கு­மாறு தெரி­வித்­துள்ளார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­தி­ர­சிறி கஜ­தீர பரிகசித்தார். சோச­லிஷ மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

டிசம்பர் 31 வரை சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் தன்­னுடன் இருக்­க­வேண்டும் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ளதன் மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்குள் பிரச்­சினை இருப்­பதை ஜனா­தி­பதி தெரிந்­து­ கொண்­டுள்ளார். அத்­துடன் டிசம்பர் மாதத்­துக்கு முன்னர் சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தை­விட்டு செல்வார்கள் என்ற அச்சம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்­றது. அத­னால்தான் டிசம்பர் 31 வரை பொறுத்­தி­ருக்­கு­மாறு தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் இரண்டு கொள்­கைகள் உடைய கட்­சிகள் ஒன்­றி­ணைந்து அர­சாங்கம் ஒன்றை கொண்­டு­ செல்ல முடி­யாது என நாங்கள் ஆரம்

பம் முதல் தெரி­வித்து வரு­கின்றோம். அத­னால்தான் மிகவும் திட்­ட­மிட்ட முறையில் அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது. அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­போதும் அது தொடர்­பாக விவாதம் நடத்­தாமல் அர­சாங்கம் பல்­வேறு கார­ணங்­களை தெரி­வித்து வரு­கின்­றது.

மேலும் பாரா­ளு­மன்­றத்­தை­விட மக்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளு­டனே நெருக்­க­மாக இருக்­கின்­றனர். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாமல் இருப்­பது மக்­களின் அடிப்­படை ஜன­நா­யக உரி­மையை மீறு­வ­தாகும்.  அர­சாங்கம் உரிய காலப்­ப­குதியில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தி­யி­ருந்தால் டெங்கு நோய் இந்­த­ளவு பரவி இருக்­காது. இதற்கு முன்­னரும் நாட்டில் டெங்கு, மலே­ரியா போன்ற நோய்கள் இருந்­தன. அதற்கு நாங்கள் முகம்­கொ­டுத்து  இந்­த­ளவு பெரு­காமல் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

அத்­துடன் அர­சாங்கம் மக்­களின் எந்த பிரச்­சி­னைக்கும் இது­வரை தீர்வு காண­வில்லை. சைட்டம் அர­சு­ட­மை­யாக்­கப்­ப­டு­வதன் மூலம் தனியார் மருத்­துவ பீடம் ஆரம்­பிப்பது தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்­வா­கப்­போ­வ­தில்லை. அதே­போன்று விவ­சா­யிகள் தற்போது வீதிக்­கி­றங்கி ஆர்ப்­பாட்டம் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். அர­சாங்­கத்தின் இய­லா ­மையே இதற்கு கார­ண­மாகும். அர­சாங்கத் தின் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்கை இல்­லாமல் போயுள்­ளது. மக்­க­ளுக்கு வாழ முடி­யாத அள­வுக்கு பொரு­ளா­தார பிரச்­சினை ஏற்­பட்­டுள்ளது. ஆனால் இவற்­றுக்கு தீர்­வு­ காண்­ப­தற்கு அர­சாங்­கத்­திடம் மாற்­று­வழி இல்லை. 

எனவே மக்கள் மய­மான அர­சாங்கம் ஒன்று அமையும் வரைக்கும் இந்த பிரச்சினைகளில் இருந்து எங்களுக்கு மீள முடியாது. அத்துடன் எந்த அரசாங்கம் வந்தாலும் தனவந்த பொருளாதார கொள்கைக்கே ஆதரவளித்து வருகின்றது. அதனால் இடதுசாரி கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08