டிசம்பர் மாதத்துக்கு முன்னர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தைவிட்டு செல்வார்கள் என்ற அச்சம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதனால்தான் டிசம்பர் 31வரை பொறுத்திருக்குமாறு தெரிவித்துள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர பரிகசித்தார். சோசலிஷ மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
டிசம்பர் 31 வரை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தன்னுடன் இருக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதன் மூலம் பாராளுமன்றத்துக்குள் பிரச்சினை இருப்பதை ஜனாதிபதி தெரிந்து கொண்டுள்ளார். அத்துடன் டிசம்பர் மாதத்துக்கு முன்னர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தைவிட்டு செல்வார்கள் என்ற அச்சம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது. அதனால்தான் டிசம்பர் 31 வரை பொறுத்திருக்குமாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரண்டு கொள்கைகள் உடைய கட்சிகள் ஒன்றிணைந்து அரசாங்கம் ஒன்றை கொண்டு செல்ல முடியாது என நாங்கள் ஆரம்
பம் முதல் தெரிவித்து வருகின்றோம். அதனால்தான் மிகவும் திட்டமிட்ட முறையில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்படுத்திவருகின்றது. அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளபோதும் அது தொடர்பாக விவாதம் நடத்தாமல் அரசாங்கம் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றது.
மேலும் பாராளுமன்றத்தைவிட மக்கள் உள்ளூராட்சி மன்றங்களுடனே நெருக்கமாக இருக்கின்றனர். உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்தாமல் இருப்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையை மீறுவதாகும். அரசாங்கம் உரிய காலப்பகுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தியிருந்தால் டெங்கு நோய் இந்தளவு பரவி இருக்காது. இதற்கு முன்னரும் நாட்டில் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் இருந்தன. அதற்கு நாங்கள் முகம்கொடுத்து இந்தளவு பெருகாமல் கட்டுப்படுத்தியுள்ளோம்.
அத்துடன் அரசாங்கம் மக்களின் எந்த பிரச்சினைக்கும் இதுவரை தீர்வு காணவில்லை. சைட்டம் அரசுடமையாக்கப்படுவதன் மூலம் தனியார் மருத்துவ பீடம் ஆரம்பிப்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வாகப்போவதில்லை. அதேபோன்று விவசாயிகள் தற்போது வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் இயலா மையே இதற்கு காரணமாகும். அரசாங்கத் தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போயுள்ளது. மக்களுக்கு வாழ முடியாத அளவுக்கு பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஆனால் இவற்றுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திடம் மாற்றுவழி இல்லை.
எனவே மக்கள் மயமான அரசாங்கம் ஒன்று அமையும் வரைக்கும் இந்த பிரச்சினைகளில் இருந்து எங்களுக்கு மீள முடியாது. அத்துடன் எந்த அரசாங்கம் வந்தாலும் தனவந்த பொருளாதார கொள்கைக்கே ஆதரவளித்து வருகின்றது. அதனால் இடதுசாரி கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM