புதிய கட்சியொன்று ஆரம்பிக்கப்பட வேண்டுமென நான் கூறவில்லை. ஆனால், புதிய கட்சியொன்று தேவை என்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக் கொடுத்தவர்கள் பலர். அவர்களில் சிலர் இங்கும் (குருணாகல்) உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குருநாகலை "தைலிய" பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியளாலர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி.யுமான மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
புதியதொரு கட்சி உருவாக வேண்டுமென நான் எந்தவொரு இடத்திலும் குறிப்பிட்டதில்லை. ஆனால் மக்களுக்கு புதியவொரு கட்சியின் தேவை ஏற்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. தற்போது கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை அரசு உடனடியாக நடத்த வேண்டும்.
நகரம், கிராமம் என பேதமில்லாது தற்போது அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் ஸ்தம்பித்துவிட்டன. நாட்டின் அபிவிருத்தி முன்னேறவில்லை அனைத்தும் ஆமை வேகத்தில் கூட நகர்வதில்லை. கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல்கள் நடத்தாவிட்டால் அவற்றை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். தனியான கட்சி உருவாக்கப்பட வேண்டும். தனிக்கட்சி உருவாக்குவேன் என நான் எந்தவொரு இடத்திலும் கூறியதில்லை.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை காட்டிக் கொடுக்காத பரிசுத்தமான கட்சிக்காரர்களுக்கு நான் என்றும் உதவி புரிவேன். சுதந்திரக் கட்சியை காட்டிக் கொடுத்த பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலர் இந்த குருநாகலையிலும் உள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM