கொழும்பு மாநகர எல்லையில் குப்பை முகாமைத்துவம் தொடர்பில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் கொழும்பு மாநகர ஆணையாளர் உட்பட உயரதிகாரிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மஹிந்த ஹந்தகம தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு மாநகர எல்லையில் குப்பை முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஏராளமான மோசடிகள் இடம்பெறுகின்றன. மாநகர ஆணையாளர் உட்பட உயரதிகாரிகளும் குறித்த மோசடியில் தொடர்பு பட்டிருக்கின்றனர். எனவே குறித்த மோச டிகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவில் கடந்த 7 ஆம் திகதி ஒரு முறைபாடு செய்துள்ளேன். மேலும் மூன்று முறைப்பாடுகள் செய்யவுள்ளேன்.
அத்துடன் மீதொட்டமுல்லை குப்பைமேட்டு விவகாரத்தில் உள்ளக ரீதியில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. அதனாலேயே குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததில் ஏராளமான உயிர்களை பலிகொடுக்க வேண்டியிருந்தது.
ஏனெனில் மீதொட்டமுல்லை குப்பைமேட்டை அழுத்தி மட்டப்படுத்துவதற்கு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தரவுகள் உள்ளன. அதற்கிணங்க 2010 ஆம் ஆண்டு குப்பைமேட்டை அழுத்தி மட்டப் படுத்துவதற்கு 39 மில்லியன் ரூபாவும் 2011 ஆம் ஆண்டு 49 மில்லியன் ரூபாவும், 2012 ஆம் ஆண்டு 56 மில்லியன் ரூபாவும், 2013 ஆம் ஆண்டு 37 மில்லியன் ரூபாவும், 2014 ஆம் ஆண்டு 43 மில்லியன் ரூபாவும், 2015 ஆம் ஆண்டு 182 மில்லியன் ரூபாவும், 2016 ஆம் ஆண்டு 232 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டபோதிலும் அதற்கான பணிகள் இடம்பெற்றிருக்கவில்லை. அப்பணிகள் இடம்பெற்றிருக்குமாயின் முடியுமானளவு சேதங்களைத் தவிர்த்திருக்கலாம். ஆகவே அந்நிதியை அதிகாரிகள் மோசடியான முறையில் தமக்குள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் மீதொட்டமுல்லையில் இரு வருடங்கள் மாத்திரம் குப்பை கொட்டுவதற்கு 2009 ஆம் ஆண்டில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எனவே 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் நீதிமன்றின் அனுமதியின்றி அங்கு குப்பை கொட்டப்பட்டுள்ளது. எனவே நீதிமன்றின் தீர்மானத்திற்கு எதிராக குப்பை கொட்டப்பட்டிருப்பதனால் அங்கு இடம் பெற்ற உயிரிழப்புகளை கொலையாக கருத வேண்டியுள்ள தாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM