யார் வெளியேறினாலும் தேசிய அரசாங்கத்தை தேசிய அரசாங்கத்தின் பதவிக்காலம் நிறைவடையும் வரை ஆட்சியை கொண்டு நடத்த ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ஐ.தே.கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி மாலை அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இவ்வருடம் இடம்பெறவுள்ள ஐ.தே.கட்சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை கோலாகலமாக கொண்டாடுவது தொடர்பாக செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.நாட்டுக்கு திறந்த பொருளாதாரத்தை அறிமுகப்படுத்திய 40 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் வரும் கட்சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழா குறித்து மக்களை தெளிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
பிரதான இருகட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய அரசாங்கத்தை நிறுவியதால் நாட்டுக்கு ஏற்பட்ட பிரதிபலன்கள் தொடர்பாகவும் செயற்குழுவில் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டது. யார் வெளியேறினாலும் அரசை எதுவித இடையூறுமின்றி முழுப்பதவிக்காலத்திலும் கொண்டு நடத்தவும் செயற்குழுவில் தீர்மானிக் கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM