உலக அளவில் அதிக பேஸ்புக் சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்காவை வீழ்த்தி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
சர்வதேச ரீதியில் பேஸ்புக் சமூகவலைதளத்தை கடந்த மாதம் வரையிலான பயன்பாட்டாளர்களின் விவரங்கள் குறித்த தரவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில், உலக அளவில் 24.1 கோடி பேஸ்புக் பயன்பாட்டாளர்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதேநேரத்தில் அமெரிக்காவில் அந்த எண்ணிக்கை 24 கோடியாக உள்ளது.
கடந்த 6 மாதங்களில் மட்டும் இந்தியாவில் பேஸ்புக் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை 5 கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு அதிகரித்தாலும், நாட்டின் மொத்த மக்கள் தொகையின்படி இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேர் மட்டுமே பேஸ்புக்கை பயன்படுத்துகின்றனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 25 வயதுக்குட்பட்டவர்களாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM