எந்த அரசாங்கமும் முகங்கொடுக்க முடியாத பிரச்சினைகளுக்கு இன்று நாம் முகங்கொடுத்து வருகின்றோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவை கடனாக செலுத்தவேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். எமது தேசிய உற்பத்தியின் வருமானத்தில் 33 வீதத்தை வாங்கிய கடன்களை கட்ட ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் இலங்கையில் எந்த அரசாங்கமும் முகம் கொடுக்காத பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் முகங்கொடுத்து வருகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். இந்த ஆண்டில் பொருளாதாரம் தொடர்பில் நாம் முகங்கொடுக்க வேண்டிய சகல பிரச்சினைகளுக்கும் முகங்கொடுத்துள்ளோம். பல்வேறு பிரச்சினைகள் எம்மை சூழ்ந்து உள்ளன, நாட்டில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நகர்வில் நாம் மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு வருகின்றோம். அனர்த்தம் ஏற்பட்ட காரணத்தினால் விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டது. அதேபோல் மின்சார பிரச்சினையும் ஏற்பட்டது. எரிபொருளுக்கு புதிய பெறுமானம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதேபோல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நாட்டின் தேசிய உற்பத்தியில் 0.5 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. அதேபோல் மீதொட்டமுல்ல குப்பை சரிந்து விழுந்தது. இப்போது டெங்கு நோய் ஏற்பட்டு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவை எமது சுற்றுலா துறையின் வீழ்ச்சியிலும் பங்களிப்பு செய்கின்றன.
அதேபோல் அடுத்த மூன்று ஆண்டுகளில் 4 ஆயிரத்து 600 பில்லியன் ரூபாவை கடனாக செலுத்தவேண்டியுள்ளது. நாம் வாங்கிய கடன்களுக்கான கால எல்லை நிறைவிற்கு வருகின்றது. எமது தேசிய உற்பத்தியின் வருமானத்தில் 33 வீதத்தை வாங்கிய கடன்களை கட்ட ஒதுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. வற்வரி அதிகரித்தோம், ஏனைய மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டோம் மக்களிடம் அதற்கான அவமதிப்பையும் பெற்றுக்கொண்டோம். ஆனால் மாற்று நடவடிக்கைகளை நாம் கையாள வேண்டிய நிலையில் அவற்றை மேற்கொள்ள நேர்ந்தது. இன்று அதில் தான் கடனுக்கான வட்டியையும் நாம் செலுத்தி வருகின்றோம். இவ்வாறான நிலைமைகளில் 2020 ஆம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதாரத்தில் சமநிலைத் தன்மையை ஏற்படுத்தி ,2025 ஆம் ஆண்டளவில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு கடன்களை பூரணப்படுத்தும் நிலைமைகளுக்கும் வரலாம்.
எனினும் கடந்த கால செயற்பாடுகளில் மேலும் இந்த நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஊழல் மோசடிகள், அனாவசிய செலவு என்பவற்றை மேற்கொள்ள நேர்ந்த காரணத்தினால் தான் நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளது. இன்று நாம் அவற்றை சரிசெய்ய மக்களின் உதவிகளையே நாடவேண்டிய தேவை உள்ளது என பிரதமர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM