எந்த அரசும் முகம் கொடுக்­காத நிலையில் இன்று நாம் ; 4 ஆயி­ரத்து 600 பில்­லியன் ரூபாவை கட­ன்

Published By: Raam

16 Jul, 2017 | 09:56 AM
image

எந்த அர­சாங்­கமும் முகங்­கொ­டுக்க முடி­யாத பிரச்­சி­னை­க­ளுக்கு இன்று நாம் முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். அடுத்த மூன்று ஆண்­டு­களில்  4 ஆயி­ரத்து 600 பில்­லியன் ரூபாவை கட­னாக செலுத்­த­வேண்­டி­யுள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். எமது தேசிய உற்­பத்­தியின் வரு­மா­னத்தில் 33 வீதத்தை வாங்­கிய கடன்­களை கட்ட ஒதுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது எனவும் அவர் குறிப்­பிட்டார். 

நெலுவ பிர­தே­சத்தில்  இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

 இது­வ­ரையில் இலங்­கையில் எந்த அர­சாங்­கமும் முகம்  கொடுக்­காத பிரச்­சி­னை­க­ளுக்கு இந்த அர­சாங்கம் முகங்­கொ­டுத்து வரு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் இன்று பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்றோம். இந்த ஆண்டில் பொரு­ளா­தாரம் தொடர்பில் நாம் முகங்­கொ­டுக்க வேண்­டிய சகல பிரச்­சி­னை­க­ளுக்கும் முகங்­கொ­டுத்­துள்ளோம். பல்­வேறு பிரச்­சி­னைகள் எம்மை சூழ்ந்து உள்­ளன, நாட்டில் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் நகர்வில் நாம் மிகப்­பெ­ரிய சவாலை எதிர்­கொண்டு வரு­கின்றோம். அனர்த்தம் ஏற்­பட்ட கார­ணத்­தினால் விவ­சாயம் முற்­றாக பாதிக்­கப்­பட்­டது. அதேபோல் மின்­சார பிரச்­சி­னையும் ஏற்­பட்­டது. எரி­பொ­ரு­ளுக்கு புதிய பெறு­மானம் செலுத்த வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. அதேபோல் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்­டது. இதனால் நாட்டின் தேசிய உற்­பத்­தியில் 0.5 வீதம் வீழ்ச்சி கண்­டுள்­ளது. அதேபோல் மீதொட்­ட­முல்ல குப்பை  சரிந்து விழுந்­தது. இப்­போது டெங்கு நோய் ஏற்­பட்டு பல்­வேறு பிரச்­சி­னை­களை உரு­வாக்­கி­யுள்­ளது. இவை எமது சுற்­றுலா துறையின் வீழ்ச்­சி­யிலும் பங்­க­ளிப்பு செய்­கின்­றன. 

அதேபோல் அடுத்த மூன்று ஆண்­டு­களில்  4 ஆயி­ரத்து 600 பில்­லியன் ரூபாவை கட­னாக செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. நாம் வாங்­கிய கடன்­க­ளுக்­கான கால எல்லை நிறை­விற்கு வரு­கின்­றது.  எமது தேசிய உற்­பத்­தியின் வரு­மா­னத்தில் 33 வீதத்தை வாங்­கிய கடன்­களை கட்ட ஒதுக்க வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. வற்­வரி அதி­க­ரித்தோம், ஏனைய மாற்று நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம் மக்­க­ளிடம் அதற்­கான அவ­ம­திப்­பையும் பெற்­றுக்­கொண்டோம். ஆனால் மாற்று நட­வ­டிக்­கை­களை நாம் கையாள வேண்­டிய நிலையில் அவற்றை மேற்­கொள்ள நேர்ந்­தது. இன்று அதில் தான் கட­னுக்­கான வட்­டி­யையும் நாம் செலுத்தி வரு­கின்றோம். இவ்­வா­றான நிலை­மை­களில் 2020 ஆம் ஆண்­ட­ளவில் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் சம­நிலைத் தன்­மையை ஏற்­ப­டுத்தி ,2025 ஆம் ஆண்­ட­ளவில் பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்பும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடன்­களை பூர­ணப்­ப­டுத்தும்  நிலை­மை­க­ளுக்கும்  வரலாம். 

எனினும் கடந்த கால செயற்­பா­டு­களில் மேலும் இந்த நாட்­டிற்கு ஏற்­பட்­டுள்ள இழப்­பு­களை அனைவரும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஊழல் மோசடிகள், அனாவசிய செலவு என்பவற்றை மேற்கொள்ள நேர்ந்த காரணத்தினால் தான் நாட்டின் கடன் தொகை அதிகரித்துள்ளது. இன்று நாம் அவற்றை சரிசெய்ய மக்களின் உதவிகளையே நாடவேண்டிய தேவை உள்ளது  என பிரதமர் கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21