இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் அணிகளுடன் இலங்கை கனிஷ்ட அணி போட்டியிடும் முதலாவது சர்வதேச கனிஷ்ட கோல்ப் சம்பியன்ஷிப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளது.
இலங்கையில் கோல்ப் விளையாட்டின் தேசிய அமைப்பாகச் செயற்படும் இலங்கை கோல்ப் ஒன்றியம், எச்.எஸ்.பி.சி. வங்கியுடன் இணைந்து முதன்முறையாக சர்வதேச கனிஷ்ட கோல்ப் சம்பியன்ஷிப் போட்டியை இவ்வருடம் இலங்கையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையில் கனிஷ்ட மட்டத்திலான கோல்ப் விளையாட்டின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போட்டியிடக்கூடிய இளம் கோல்ப் வீரர்களை இனங்காணும் முகமாகவும் கனிஷ்ட உப குழு இந்த சம்பியன்ஷிப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் தொடரை நடத்தும் இலங்கையுடன் சேர்த்து மொத்தம் நான்கு நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொழும்பு ரோயல் கோல்ப் கழகத் திடலில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி குறித்து இலங்கை கோல்ப் ஒன்றியத் தலைவர் பிரியத் பெர்னாண்டோ தெரிவிக்கை யில், இளம் கோல்ப் வீரர்கள் மத்தியில் சிறந்த திறமை காணப்படுகின்றமையை சில வருடங்களுக்கு முன் அவதானித்த எமது சங்கம், எமது இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்புக்களை அளிப்பதற்கு வலுவான கனிஷ்ட கோல்ப் உப குழுவொன்றை ஏற்படுத்தியது. இதனூடாகவே சர்வதேச கனிஷ்ட போட்டியை நடத்துவதற்கான எண்ணம் உருவானது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM