கடந்த ஏழு ஆண்டுகளில் இலங்கையில் இருந்த டெங்கு நுளம்பு வகைக்கு அப்பால் புதிய வகையிலான நுளம்பு பரவல் ஆரம்பித்துள்ளது. புதிய வகையிலான வைரஸ் நோயை கொண்டுவந்து தாக்கத்தை மோசமானதாக மாற்றி வருகின்றது என சுகாதார பணிப்பகம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகின்றது. கடந்த நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது. கடந்த ஏழு மாத காலத்தில் சராசரியாக 90 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் 269 பேர் காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் மாத்திரம் இல்லாது பல்வேறு நாடுகளில் டெங்கு நோய் பரவல் அதிகரித்து வருகின்றதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. வியட்நாம், மலேசியா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் மிகவும் வேகமாக டெங்கு நோய் பரவி வருகின்றது. இலங்கையிலும் அதே போன்றதொரு மோசமான நிலைமையே காணப்பட்டு வருகின்றது.
இலங்கையில் கடந்த ஏழு மாதங்களில் மொத்தமாக நாடளாவிய ரீதியில் 89 ஆயிரத்து 885 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் 269 பேர் உயிரிழந்துள்ளனர். மாகாண ரீதியில் பார்க்கையில் மேல் மாகாணத்தில் 37ஆயிரத்து 981 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
தென் மாகாணத்தில் 8 ஆயிரத்து 141 பேர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 29 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாகாணத்தில் 4ஆயிரத்து 499 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 709 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சப்ரகமுவ மாகாணத்தில் 9 ஆயிரத்து 688 பேர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் 7 ஆயிரத்து 980 பேர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மாகாணத்தில் 6 ஆயிரத்து 194 பேர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஊவா மாகாணத்தில் 2 ஆயிரத்து 512 பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர். வடமத்திய மாகாணத்தில் 2 ஆயிரத்து 181 பேர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மரண வீதமானது நோயாளர் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 0.3 வீதமாக உள்ளது. இதில் 15 வயது தொடக்கம் 45 வயது வரையிலானோர் 50 வீத இறப்பை கொண்டுள்ளனர். 45 வயதிற்கு மேற்பட்டவர்களின் இறப்பு வீதமானது 35 வீதத்தை கொண்டுள்ளது. அதேபோல் 15 வயதிற்கு குறைந்த வயதினர் 15 வீதமானோர் உயிரிழந்துள்ளனர்.
நுளம்பு தாக்கமானது 5 வயது தொடக்கம் 18 வயது வரையிலானவர்கள் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்படும் வீதமானது 30 வீதமாக உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் டெங்கு காய்ச்சல் பரவலும் உயிரிழப்பு வீதமும் உயரிய மட்த்தில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 154 பேர் ஆகும். குறிப்பாக இந்த ஆண்டில் தொடர்ச்சியாக நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் அதிகளவிலான அனர்த்தங்களும் குப்பை பிரச்சினையும் டெங்கு தொற்று அதிகரிக்க முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளில் இலங்கையில் இருந்த டெங்கு நுளம்பு வகைக்கு அப்பால் புதிய வகையிலான நுளம்பு பரவல் ஆரம்பித்துள்ளது. புதிய வகையிலான வைரஸ் நோயை கொண்டுவந்து தாக்கத்தை மோசமானதாக மாற்றி வருகின்றது. இந்த வகை நுளம்புகளானது சிங்கப்பூர் நாட்டில் மாத்திரம் இதுவரை காலம் காணப்பட்டது.
ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் இந்த வர்க்க நுளம்புகள் பரவி வருகின்றது. இலங்கையில் இதுவரை நான்கு நோய் தாக்கத்தை உருவாக்கும் இரண்டு வகையிலான டெங்கு நுளம்புகள் உள்ளன. ஆரம்பத்தில் முதலாம் மற்றும் நான்காம் வர்க்க நுளம்புகளின் தாக்கமே அதிகமாக காணப்பட்டது. இது தாக்கம் குறைவானதாகும்.
எனினும் இப்போது பரவிவரும் டெங்கு காய்ச்சலானது இரண்டாம் வர்க்கத்தை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை பிரதேசத்தில் அனைத்து அசுத்தமான பகுதிகளிலும் முட்டை இடக்கூடிய தன்மையை கொண்டுள்ளது.
மேலும் ஆரம்பத்தில் டெங்கு நோயை கண்டறிய இலகுவான அறிகுறிகள் இருந்தது. அதாவது தொடர்ச்சியான காய்ச்சல், உடலில் தழும்புகள், இருமல், கண்வலி ஆகியவை காணப்படும். எனினும் இப்போது இரண்டாம் வர்க்க நுளம்புகளின் தாக்கம் பெரிய அளவிலான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை.
இது உடல் வலியை வெளிப்படுத்தும் எனினும் தழும்புகளை காட்டவோ ஏனைய அறிகுறிகளை வெளிப்படுத்துவதோ மிகக் குறைவானதாகும். பத்தாயிரம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதில் ஆயிரம் பேருக்கே அறிகுறிகள் வெளிப்படுத்தப்படும். அதிலும் குறைந்த நோயாளர்களுக்கே சரியான வெளிப்பாடு காட் டப்படும்.
ஆகவே சாதாரண காய்ச்சல் ஏற்பட்டாலும் அனைவரும் இரத்த பரிசோதனை செய்யவேண்டும். அதேபோல் பொதுமக்கள் அனைவரும் தத்தமது சூழலை சுத்தம் செய்து நோய் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். வீட்டு சூழல் மாத்திரம் இன்றி பாடசாலை, காணிகள், கைவிடப்பட்ட காணிகள் என சகல பகுதிகளையும் மக்கள் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என சுகாதார பணிப்பகம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM