சந்தையில் மிளகின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக மிளகை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் துறை அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இதன் மூலம் திறந்த சந்தை பொருளாதாரத்தில் மிளகின் விலையை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகின் வருடாந்த மிளகு தேவை மூன்று இலட்சம் தொன்களாகும். இருந்த போதிலும், இம்முறை இதன் உற்பத்தி நடவடிக்கைகள் நான்கு இலட்சம் தொன்களையும் தாண்டியுள்ளன. அதிகளவு மிளகை உற்பத்தி செய்யும் நாடாக வியட்நாம் கருதப்படுகிறது.
இந்த உற்பத்தி நடவடிக்கைகளின் அதிகரிப்பு காரணமாக மிளகின் கிராக்கி சிறிதளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமைய கருத்திற்கொண்டு அரசாங்கம் மிளகை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM