(க.கிஷாந்தன்)
மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
மஸ்கெலியா ஸ்டஸ்பி தேவகந்த என்னும் பிரதேச பாடசாலை ஒன்றின் திருமணமான இரண்டு பிள்ளைகளின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தரம் 11 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவியை, ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மாணவியின் பெற்றோர்கள் இன்று ஹட்டன் கல்வி வலய அதிகாரிகளுக்கு முறையிட்டதன் பின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி குறித்த ஆசிரியரின் வீட்டில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குறித்த மாணவி பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் நாளை அன்று ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM