இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதவுள்ள ஒரே ஒரு டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி இலங்கைக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3–2 என வெற்றி கொண்டு வரலாற்று சாதனையை நிகழ்த்தியது.
இந்நிலையில் இந்தத் தொடரில் தோற்றதன் எதிரொலியாக இலங்கை அணியில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
குறிப்பாக ஒருநாள், டெஸ்ட் மற்றும் இருபதுக்கு 20 என மூன்று வகைக் கிரிக்கெட் போட்டிகளுக்கும் தலைவராக இருந்த அஞ்சலோ மெத்தியூஸ் திடீரென பதவி விலகினார்.
இந்நிலையில் ஒருவர் வகித்த பதவியை இருவருக்கு பிரித்து வழங்கியது இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம்.
அதன்படி டெஸ்ட் போட்டிகளுக்கு தினேஷ் சந்திமாலையும், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 போட்டிகளுக்கு உபுல் தரங்கவையும் தலைவர்களாக நியமித்துள்ளது.
இந்நிலையில் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இலங்கை அணி இன்று டெஸ்ட்
போட்டியில் சிம்பாப்வே அணியை சந்திக்கிறது.
இந்தப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி
தினேஷ் சந்திமால் (தலைவர்), உபுல் தரங்க (உப தலைவர்), அஞ்சலோ மெத்தியூஸ், நிரோஷன் திக்வெல்ல, திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், அசேல குணரத்ன, ரங்கன ஹேரத், டில்ருவன் பெரேரா, சந்தகான், விஷ்வ பெர்னாண்டோ, துஷ்மந்த சமீர, சுரங்க லக்மால், லஹிரு குமார.
இலங்கை, டெஸ்ட் போட்டியொன்றில் இறுதியாக சிம்பாப்வே அணியை அவர்களது சொந்த மண்ணில் கடந்த 2016ஆம் ஆண்டு, நவம்பர் மாதத்தில் சந்தித்திருந்தது.
அதில், ரங்கன ஹேரத்தின் சிறந்த பந்துவீச்சின் காரணமாக
இலங்கை அணி இரண்டு போட்
டிகள் கொண்ட தொடரை 2–-0 என கைப்பற்றியிருந்தது.
இதுவரையில் இரண்டு அணி
களும் 17 டெஸ்ட் போட்டிகளில்
விளையாடியிருக்கின்றன.
அதில் 12 போட்டிகளில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளதோடு, 5 போட்டிகள் சமநிலை அடைந்திருக்கின்றன.
எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் சிம்பாப்வே அணியானது இதுவரை இலங்கையை வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திமால், திறமைமிக்க துடுப்பாட்ட வீரர் எனினும் தனது அண்மைய மோசமான ஆட்டங்களின் காரணமாக இலங்கையின் ஒரு நாள் அணியில் சேர்க்கப்படாது போயிருந்தார். எனினும், டெஸ்ட் போட்டிகளில் 42.33 என்கின்ற சிறப்பான ஓட்ட சராசரியினைக் கொண்டிருக்கும் இவர் அணியின் தலைவர் என்பதால் துடுப்பாட்டத்தினை மேலும் சிறந்த முறையில் முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் காணப்படுகின்றார்.
இந்தப் போட்டி குறித்து கருத்து தெரிவித்த தினேஷ் சந்திமால், அழுத்தங்களுக்கு மத்தியில் அணியை வழிநடத்த வேண்டிய பொறுப்பை என்னிடம் தந்திருக்கிறார்கள்.
இந்தப் போட்டியில் நாம் கடுமையாக விளையாடவேண்டும். இதில் மட்டுமல்ல, எந்தவொரு போட்டியாக இருந்தாலும் எமது முழுத் திறமையுடன் நாம் போட்டியிட வேண்டும். மூத்த மற்றும் இளம் வீரர்களைக் கொண்ட அணியாக நாம் இருக்கிறோம். அதேவேளை சிம்பாப்வே அணியும் எமக்கு சவால் விடுக்கும் வகையில் ஆடும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்கு ஏற்ற வியூகங்களுடன் இன்றைய போட்டியில் களமிறங்குவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM