வவுனியாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற இளைஞர்களின் மோதலின் போது 4 இளைஞர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று 13.07 பிற்பகல் 4 மணியளவில் வவுனியா செட்கட்டிபிலவு பகுதியில் இளைஞர்கள் மீது வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இறுதியில் மோதலாக மாறியுள்ளது. இதில் செட்கட்டிப்பிலவு பகுதியைச் சேர்ந்த அ. மயூரன் வயது 28, பி. சுவிதரன் வயது 27, கே. இந்திரன் வயது 27, கே தங்கீதன் வயது 24 ஆகியோர் மீது கம்பி, தடிகள் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் தாக்குதலில் குறித்த நால்வர் காயமடைந்ததையடுத்து தாக்குதல் நடாத்தியவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இளைஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM