மன்னார் மாவட்டத்தில் கரிசல் கிராமத்தில் இரு சமூகங்களுக்கிடையே நிலவியுள்ள முறுகல் நிலையை தணித்து அப்பகுதியிலுள்ள இரு சமூகத்தினருக்கிடையே சுமுக நிலையை உருவாக்கி அமைதியை ஏற்படுத்தும் நோக்குடன் வடக்கு முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் ஆயர் இல்லத்துக்குச் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இப்பேச்சுவார்த்தையின்போது வடக்கு முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் பெரிய கரிசல் முஸ்லிம் பிரதிநிதிகளும் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகையும், குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளாருடன் மன்னார் கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவர் கென்னடி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இப்பேச்சுவார்த்தையில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் இடம்பெற்ற வன்செயல்கள் தொடர்பாக தற்பொழுது சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அதை விடுத்து இரு சமூகங்களுக்கிடையே எதிர்காலத்தில் இவ்வாறான நிலை தொடராதிருக்குமுகமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கமைய மன்னார் மாவட்ட சமூக நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு ஒரு சுமுகமான நடவடிக்கையாக கரிசல் கிராமத்தில் 'சமாதான செயலணி' ஒன்றினை இஸ்லாமிய, கத்தோலிக்க, இந்து மக்களை உள்ளடக்கியதாக ஸ்தாபித்தல், அங்கு வாழ்கின்ற மக்களின் மத ரீதியான கிரியைகளின்போது அவர்கள் சுயமாக செயல்படுவதற்கு ஒரு சாராரால் மற்றொருவருக்கு இடையூறுகளோ அச்சுறுத்தல்களோ ஏற்படாத வண்ணம் செயற்படுதல், இதனை சமூகரீதியில் உத்தரவாதப்படுத்துதல், குறித்த காணி தொடர்பிலான பிணக்கினைத் தீர்ப்பதற்கு முன்னோடியாக, குறித்த காணி தொடர்பில் முழுமையான தகவல் திரட்டொன்றினையும், நடுநிலையான ஆய்வொன்றினையும் மேற்கொள்ளல், ஆகிய முக்கிய மூன்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, இதுவரை மீறப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சார்ந்த விடயத்தில் பொலிஸாரின் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு இடையூறாக எவரும் செயற்படுவதில்லை என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைகளை தணிக்கும் விதத்தில் இரண்டு சமூகங்களையும் பள்ளிவாயல் நிர்வாகமும், ஆலய நிர்வாகமும் அத்துமீறல்கள் இடம்பெறா வண்ணம் நிலைமைகளை வைத்திருத்தல் என்றும் தீர்மானிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM