டெங்குக் காய்ச்சலின் குறித்து அதனைத்தடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.
இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவிலிருந்து வருகை தந்த வைத்தியர் தலைமையிலான மூன்று வைத்தியர்களைக் கொண்ட குழு டெங்கு காச்சல் தொடர்பில் ஒருமணிநேரம் வரையில் விளக்கிக்கூறியுள்ளனர். அந்தக் காச்சலின் தாக்கம் அதனை தடுப்பதற்கான வழிவகை தொடர்பாகவும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்படவேண்டும். அமைச்சர்கள் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவேண்டும். ஒவ்வொரு வீடு வீடாக சென்று இதற்கான அறிவுறுத்தல்கள் விடுக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்கரை ஓரங்களில் நீண்டகாலமாக பழுதடைந்திருக்கும் கப்பல்களில் நீர்தேங்கி நிற்பதாலும் டெங்கு நுளம்புகள் பெருகுகின்றன. இதனைவிட வீடுகளை பூட்டிவிட்ட பலரும் மாதக்கணக்காக வெளிநாடுகளில் நிற்பதால் அத்தகைய வீடுகளுக்குள் சோதனை செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே இத்தகைய வீடுகள் தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM